6 ஏப்., 2011


08th Mar 2011
உலக கோப்பை 2014: உலகின் மிகப்பெரிய மரக்கானா ஸ்டேடியம் இடிக்கப்படுகிறது
புதிய மரக்கானா
 உலகின் மிகப் பெரிய கால்பந்து மைதானமான மரக்கானா புணரமைத்து கட்டுவதற்காக இடிக்கப்பட்டது.
 பிரேசிலை போலவே ரியோடி ஜெனிராவில் உள்ள மரக்காணா ஸ்டேடியமும் கால்பந்துக்கு பெரும்புகழ் பெற்றது.கவுண்டமணி பாணியில் ஸ்டேடியங்களுக்கு எல்லாம் ஸ்டேடியம் என்று இதனை சொல்லலாம். கால்பந்தின் தாய்வீடு என்றும் மரக்கானாவை அழைக்கலாம்.1948ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் 1950ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 2 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டது.
 1950 ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மரக்கானாவில் நடந்தது.இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவேயை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியை 1,99,854 ரசிகர்கள் நேரில் பார்த்தனர்.இந்த சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை.அதற்காக வாய்ப்பு இனிமேலும் ஏற்படப் போவது இல்லை. ஏனென்றால் பிரமாண்ட ஸ்டேடியங்கள் எல்லாம் புணரமைத்து கட்டப்பட்டு வருகின்றன.
 பாதுகாப்பு காரணங்களுக்காக மரக்காணாவின் இருக்கை அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. தற்போது 1 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் உள்ள மரக்காணா, 2014ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக இடித்து மீண்டும் புணரமைத்து கட்டப்பட உள்ளது.மரக்கானாவின் இருக்கை எண்ணிக்கை 82 ஆயிரத்து 238 ஆக குறைக்கப்படவும் உள்ளது. 8 கட்டுமான நிறுவனங்கள் இணைந்து புணரமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளன. இதற்காக ஸ்டேடியத்தினை இடிக்கும் பணிகள் தொடங்கி விட்டன. வருகிற 2013ம் ஆண்டுக்குள் மரக்காணா புதுப்பொலிவுடன் தயராகி விடும்.
 2014ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் தொடக்க விழா மற்றும் இறுதி ஆட்டம் மரக்காணாவில்தான் நடக்க உள்ளது. அது மட்டுமல்ல 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் துவக்கவிழா,நிறைவு விழா போன்றவை இங்குதான் நடக்க உள்ளது. இதனால் உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் மற்றும் ஒலிம்பிக் போட்டி நடந்த ஸ்டேடியங்கள் வரிசையில் மரக்காணாவும் இடம்பெறப் போகிறது.
 இதற்கு முன் லண்டன் வெம்ப்ளி,பாரீஸ்,ரோம்,மியூனிச்,பெர்லின் நகரங்களில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியங்கள் இத்தகைய அரிய பெருமையை பெற்றுள்ளன.

டோகா கேப்டன் நவீன கால்பந்தின் 'அவமானச்சின்னம்' -உண்மை சம்பவங்களின் தொகுப்பு

  டோகா கால்பந்து அணியின் கேப்டன் ஒரு வேளை உலகின் மிகச் சிறந்த ஸ்டிரைக்கராக இருக்கலாம்.ஆனால் பொதுவாக அவரது மனம் பணத்தை தேடிதான் அலைந்து திரிந்தது.நவீன கால்பந்தில்,மோசமான கால்பந்து வீரருக்குரிய அத்தனைஅடையாளங்களும் அவருக்கு இருந்தது.இதற்கு சில சம்பவங்களை உதாரணமாக கூறலாம்.
 கடந்த 2006ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முதல் முறையாக டோகா அணி தகுதி பெற்றது.பெரும்பாலான கால்பந்து வீரர்கள் சல்லிக்காசு கூட வாங்காமல் தாய்நாட்டுக்காக உலக கோப்பை போட்டியில் விளையாட தாயராக இருப்பார்கள்.அந்த உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ஒரு வீரருக்கு தலா 1,96,000 யு.எஸ். டாலர்களை சம்பளமாக தர வேண்டும் என்றும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 38 ஆயிரம் யு.எஸ்.டாலர்களும் 'டிரா'வுக்கு 19 ஆயிரம் டாலர்களும் கூடுதலாக தரவேண்டும் என்றும் டோகா கால்பந்து சங்கத்துக்கு கோரிக்கை விடுத்தார் அடபாயர்.இல்லையென்றால் உலக கோப்பை போட்டியில் டோகா களம் இறங்காது என்றும் அவர் மிரட்டினார். பின்னர் 'பிபா' தலையிட்டதால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.ஆனால் அந்த உலக கோப்பையில் டோகா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமலும் 'டிரா' கூட செய்ய முடியாமலும் 3 முதல் சுற்று போட்டியிலும் தோற்று போட்டியை விட்டு வெளியேறியது.
 கடந்த 2008ம் ஆண்டு ஆர்சனல் அணிக்காக விளையாடி வந்த இம்மானுவேல் அடபாயர் அந்த அணியின் கேப்டன் தியேரி ஹென்றிக்கு இணையாக 65 ஆயிரம் பவுண்டுகளை வார சம்பளமாக தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார். இவரது சம்பளம் வாரத்திற்கு 61 ஆயிரம் பவுண்டுகள்.இவரை விட அவருக்கு 4 ஆயிரம் பவுண்டுகள் அதிகம். ஆனால் ஆர்சனல் அணிக்காக தியேரி ஹென்றி அடித்த கோல்கள் 226.இவர் அடித்ததோ வெறும் 46 மட்டுமே. அவ்வாறு தரவில்லை என்றால் ஆர்சனலை விட்டு விலகுவேன் என்று கூறிய அவர் அந்த அணியை விட்டு விலகி மான்செஸ்டர் சிட்டியில் இணைந்தார்.  பெரும்பாலான கால்பந்து வீரர்கள் தங்களது முன்னாள் கிளப்புகளுக்கு எதிராக விளையாடும் போது கோல் அடித்தால் அமைதியாகவே இருப்பார்கள். கோல் அடித்ததை ஆர்ப்பாட்டமாக கொண்டாட மாட்டார்கள். ஆனால் ஆர்சனலுக்கு எதிராக ஒரு முறை கோல் அடித்த அடபாயர் நேரே ஆர்சனல் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று காலரியின் தடுப்பு சுவரில் ஏறி நின்று 'வெற்றி எனக்கே' என்று கொக்கரித்தார். இந்த போட்டி நடந்தது ஆர்சனலுக்கு சொந்தமான எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில்.
 இவற்றை எல்லாம் விட மோசமாக 2008ம் ஆண்டு இன்னொரு சம்பவம் நடந்தது. ஜாம்பியாவுக்கு எதிராக ஒரு சர்வதேச ஆட்டத்தில் விளையாட டோகா அணி கிளம்பிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று விமானத்தில் ஏற மறுத்து அடபாயர் அடம் பிடித்தார். காரணம் என்ன தெரியுமா? விமானம் விபத்துக்குள்ளாகி விட்டால் என் உயிருக்கு யார் உத்திரவாதம்? தருவார்கள். இந்த விமானத்தில் டோகா கால்பந்து சங்கத் தலைவரும் வந்தால் மட்டுமே தானும் ஏற முடியும் என்று கூறி அடம் பிடித்தார். அன்றைய தினத்தில் டோகா கால்பந்து சங்கத் தலைவரின் தாய் இறந்து போனார். தாயாரின் இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த போது டோகா கால்பந்து சங்க தலைவருக்கு தகவல் போனது. அங்கிருந்தவாரே அவர் சமாதானம் செய்தாலும் அடபாயர் சமாதானமாகவில்லை.கடைசி வரை அடபாயர் விமானத்தில் ஏற மறுத்து விட்டார். இவரைத் தவிர அனைத்து வீரர்ளும் விமானத்தில் ஏறி பத்திரமாக ஜாம்பியோ போய் சேர்ந்தனர். ஆனாலும் அடபாயர் இல்லாத டோகா அந்த போட்டியில் தோற்றும் போனது.அதே வேளையில் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள அங்கோலாவுக்கு பஸ்சில் சென்ற போதுதான் தீவிரவாதிகள் டோகா வீரர்களை தாக்கினர் என்பதையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று இம்மானுவேல் அடபாயர் நிர்பந்தம் செய்திருக்கலாம். எல்லாம் என் தலைவிதி என்று டோகா கால்பந்து சங்கம் அதனை ஏற்றிருக்கலாம்.
 இங்கிலீஸ் பிரீமியர் லீக் நடப்பு சீசனில் ஆர்சனல் மான்செஸ்டர் சிட்டிக்கு சொந்தமான 'ஈஸ்ட்லேன்ட்' ஸ்டேடியத்தில் ஒரு போட்டியில் விளையாடியது.ஒரு கிளப்பை விட்டு விலகிய வீரர்கள் முன்னாள் சக வீரர்களை சந்திக்கும் போது உணர்ச்சிபெருக்கமாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொள்வார்கள். ஆர்சனல் மான்செஸ்டருக்கு வந்த போது,அவர்களிடம் சென்று கைகுலுக்காத அடபாயர் அந்த போட்டியின் போது பழிவாங்கும் நோக்குடன் இருந்தார்.அந்த போட்டியில் தனது முன்னாள் சகாவான ரூபின் வான் பார்சி முகத்தில் முழங்கையால் தாக்க அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் தாரை தாரையாக வழிந்தது. இதனையடுத்து அடபாயருக்கு 4 போட்டிகளில் பங்கேற்க எப்.ஏ தடை விதித்தது. அது போல் ஆர்சனல் கேப்டன் செஸ்க் பெப்ரிகாசையும் இந்த போட்டியின் போது  அடபாயர் தாக்கினார்.
 இப்படிப்பட்ட அடயபார் உயிருக்கு பயந்து கால்பந்தில் இருந்து விலகி இருப்பது ஒன்றும் ஆச்சரியமாக விஷயம் இல்லை. அவருக்கு தாய்நாட்டுக்கு விளையாடுவதை விட கிளப்புகளுக்காக விளையாடினால் கோடி கோடியாக டாலர்கள் கொட்டுகிறது.இதனால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்க கூடும். 'வானத்தில் இருந்து விழுந்து  பிழைத்தவனும் உண்டு  கல் தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு ' என்ற பழமொழியை அடபாயர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. 

ஆப்பிரிக்கன் சாம்பியன்ஸ் லீக்: துனிஷீய வீரர்களை விரட்டியடித்த எகிப்து ரசிகர்கள்
 ஆப்பிரிக்கன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் எகிப்து ரசிகர்கள் துனிஷீய வீரர்களை விரட்டி தாக்கியதோடு நடுவர்களையும் அடித்தனர்.இதனால் போட்டி கைவிடப்பட்டது.
 ஆப்பிரிக்கன் சாம்பியன்ஸ் லீக் முதல் ரவுண்டு ஆட்டத்தில் துனிஷீயாவின் தி ஆப்பிரிக்கன் அணி எகிப்தின் ஷமாக் அணியுடன் மோதியது.இந்த போட்டி கெய்ரோவில் நடந்தது.போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.போட்டியின் போது ஷமாக் 2-1 என்று முன்னிலையில் இருந்தது.முன்னிலையில் இருந்த ஷமாக் மீண்டும் ஒரு கோல் அடித்தது.ஆனால் இதனை ஆப்சைடு என்று கூறி நடுவர் கோல் அளிக்க மறுத்து விட்டார்.
 இதனால் ஆத்திரமடைந்த ஷமாக் ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து ஆப்பிரிக்கன் அணி வீரர்களை தாக்கத் தொடங்கினர். மேலும் நடுவர்,லைன்ஸ்மேன்களையும் விரட்டி விரட்டி அடித்தனர். வீரர்களும் நடுவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடத் தொடங்கினர். போட்டியை நடத்த விடாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கோல்கம்பத்தை உடைத்தது. ரசிகர்களின் வன்முறையை அடுத்து இந்த போட்டி கைவிடப்பட்டது.
 மைதானத்தில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே, இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவத்திற்காக எகிப்து பிரதமர் துனீஷிய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்: ரியல் 'புயல்' வேக ஆட்டம் மிரட்டிய டாட்டன்ஹாம் மிரண்டு ஓடியது
 சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்ற டாட்டன்ஹாமை ரியல்மாட்ரிட் 4-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது.
 மாட்ரிட்டில் உள்ள சான்டியாகோ பெர்னாபூ ஸ்டேடியத்தில் ரியல்மாட்ரிட் இங்கிலாந்தின் டாட்டன்ஹாமை சாம்பியன்ஸ் லீக் கால்இறுதியில் எதிர்கொண்டது. சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்றுள்ள டாட்டன்ஹாமை கண்டு ரியலும் மிரண்டு போய்தான் இருந்தது.
 ஆட்டம் துவங்கிய 4வது நிமிடத்தில் இம்மானுவேல் அடபாயர் அடித்த கோல் மூலம் ரியலுக்கு சற்று நம்பிக்கையும் தெம்பும் வந்தது. ரியல் 1-0 என்று முன்னிலை பெற்ற நிலையில் 15வது நிமிடத்தில் டாட்டன்ஹாமுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த அணியின் முன்னணி வீரரான பீட்டர் கூரூச் தொடர்ந்து இரு மஞ்சள் அட்டைகளை பெற்றதால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். 10 வீரர்களுடன் விளையாடிய டாட்டன்ஹாமால் ரியல் வீரர்களை சமாளிக்க முடியவில்லை.
 தொடர்ந்து பிற்பாதி ஆட்டத்தில் 57வது நிமிடத்தில் அடபாயர் தலையால் முட்டி 2வது கோலை அடித்தார். அதை தொடர்ந்து 57 வது ஏஞ்சல் டி மரியா,87வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலா ஒரு கோல் அடித்தனர்.ஆட்ட நேர இறுதியில் ரியல்மாட்ரிட் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.2வது லெக் ஆட்டம் வருகிற 13ந் தேதி லண்டனில் உள்ள வொயிட் ஹார்ட் லைன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது

06th Apr 2011
சாம்பியன்ஸ் லீக்: நடப்பு சாம்பியன் இன்டர்மிலானுக்கு முடிவுகட்டியது சால்கி

 சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி ஆட்டத்தில் இன்டர்மிலானை சால்கி 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்த படுதோல்வியால் இன்டர்மிலானின் அரை இறுதி கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
 சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நேற்று கால்இறுதி முதல் லெக் ஆட்டங்கள் நடந்தது.மிலானில் உள்ள சான்சிரோ ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் இன்டர்மிலானை எதிர்த்து ஜெர்மனியின் சால்கி களம் இறங்கியது.முதல் நிமிடத்திலேயே இன்டரின் ஸ்டான்கோவிக் கோல் அடிக்க சால்கி ஆடிப் போனது.17வது நிமிடத்தில் சால்கி பதில் கோல் திருப்பியது. மாதீப் இந்த கோலை அடித்தார்.தொடர்ந்து34வது நிமிடத்தில் டீகோ மிலிட்டோ இன்டருக்கான 2வது கோல் அடித்தார். 40வது நிமிடத்தில் சால்கியும் 2வது கோலை அடித்தது. முதல் பாதி ஆட்டம் 2-2 என்று சமநிலையில் முடிந்தது.
 பிற்பாதியில் 53வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் கேப்டன் ரால் கன்சாலஸ் ஒரு கோல் அடிக்க சால்கி முன்னிலை பெற்றது. தொடர்ந்து 57வது நிமிடத்தில் இன்டர்மிலானின் ரன்சியோ 'சேம்சைடு' கோல் அடித்தார்.இதனால் இன்டர் வீரர்கள் சோர்ந்து போனார்கள்.மீண்டும் 75வது நிமிடத்தில் ரால் இன்னொரு கோல் அடிக்க, ஆட்ட நேர இறுதியில் சால்கி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 இந்த படுதோல்வியை அடுத்து இன்டர்மிலான் அரை இறுதி போட்டிக்குள் நுழைவது கடினமே. வருகிற 13ந் தேதி ஜெல்சன்கிர்சன் நகரில் 2வது லெக் ஆட்டம் நடைபெற உள்ளது.இதில் இன்டர் குறைந்தது 4-0 என்ற கோல் கணக்கிலாவது சால்கியை தோற்கடிக்க வேண்டும்.இது நடக்காத காரியம் என்றே தோன்றுகிறது. இதனால் நடப்புசாம்பியனின் சாம்பியன்ஸ் லீக் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

'பிபா' தலைவர் தேர்தல்: முகமது பின் ஹமாமுக்கு தென் கொரியா ஆதரவு
 'பிபா' தலைவர் தேர்தலில் ஜோசப் பிளேட்டரை எதிர்த்து போட்டியிடும் ஆசியரான முகமது பின் ஹமாமுக்கு தென் கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.
 'பிபா' தலைவருக்கான தேர்தல் வருகிற ஜுன் 1ந் தேதி சூரிச்சில் நடைபெற உள்ளது.தற்போதைய தலைவரான சுவிட்சர்லாந்தின் ஜோசப் பிளேட்டர் 4வது முறையாக மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து களம் இறங்குவது கத்தார் நாட்டை சேர்ந்த முகமது பின் ஹமாம். இவர் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஆவார்.
 இந்த நிலையில் ஆசியர் என்ற வகையில் முகமது பின் ஹமாமுக்கு தென்கொரியா ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.இது குறித்து தென்கொரிய கால்பந்து சங்கத்தின் கவுரவத் தலைவர் சங் மாங் ஜீன் கூறுகையில், ''ஜோசப் பிளேட்டர் பொது செயலர், தலைவர் என்று சுமார் 30 ஆண்டு காலம் 'பிபா'வில் பணியாற்றி விட்டார்.அவருக்கு ஒய்வளிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. 'பிபா'வில் அவருக்கு அவ்வளவாக நல்ல பெயர் இல்லை.ஆசியர்களால் 'பிபா'வை திறம்பட நிர்வகிக்க முடியாது என்று கூறுவது ஏற்புடையதல்ல. முகமது பின் ஹமாம் 'பிபா' தலைவருக்கு ஏற்றவர்'' என்றார்.
 'பிபா' செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை 24ல் இருந்து 41 உயர்த்துவது உள்ளிட்ட சில வாக்குறுதிகளை முகமது பின் ஹமாம் அளித்துள்ளார். அதே வேளையில் கோல்லைன் டெக்னாலஜி 2014ம் ஆண்டு உலக கோப்பையில் அறிமுகப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை ஜோசப் பிளேட்டர் அளித்துள்ளார்.

3 ஏப்., 2011


63 ஆயிரம் தடவைக்கு மேல் சுழன்ற முரளியின் கை ஓய்கிறது
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 06:28.36 AM GMT ]
கிரிக்கெட் விளையாட்டின் சுழல்பந்து ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நேற்றைய போட்டியோடு தனது சுழலுக்கு ஓய்வளித்துள்ளார்.
1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதி பிறந்த இவர், தனது 20ஆவது வயதில் அதாவது 1992ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகிற்குள் காலடி வைத்தார்.
இவர் தனது கல்வியை கண்டி கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்தார். பாடசாலைக் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு அணியில் வேகப்பந்து வீச்சாளராகவே விளையாடினார்.
ஆயினும் தனது 14 ஆவது வயதில் பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோவால் ஓவ்ப் ஸ்பின்னராக பந்து வீச பயிற்றுவிக்கப்பட்டார். இதனடிப்படையில் 11 பேர் கொண்ட குழுவில் பாடசாலை சார்பாக விளையாடியதுடன் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரராகவே களமிறங்கினார்.
பாடசாலை மட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முரளி, 1990 / 91 களில் நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அவ்வாண்டின்  Bata வின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை  A அணியில் இடம்பிடித்த இவர் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டைக் கூட முரளி வீழ்த்தவில்லை.
இதன் பின்னர் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதனால் 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடனான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார்.
தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
சிறப்பாக செயற்பட்டு வந்த முரளிக்கு பல சோதனைகள் அடுத்தடுத்து காத்திருந்தன.
முரளியின் கிரிக்கெட் வரலாற்றில்  Boxing Day  என கருதப்படும் நாள் 1995 ம் ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி. அன்றைய தினம்தான் முரளிதரன் பந்து வீசிய போது நடுவராக கடமையாற்றிய டெரல் ஹெயார் அவர் பந்தை எறிகிறார்  Chuck Ball  என்று கூறி குற்றம்சாட்டினார்.
அதன் பின் 10 நாட்கள் கழித்து 1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ம் திகதி அன்று மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியின்போது முரளிதரன் தனது முதலாவது ஓவரை வீசிய போது 3 முறை Chuck Ball  என்று நோபோல் வழங்கப்பட்டது. அன்று நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன்.
முரளியின் பந்துவீச்சு Chuck Ball  எனக் கருதக் காரணம், ஓவ்ப் ஸ்பின் முறையிலேயே பந்துவீசும் முரளிதரன் லெக் ஸ்பின் முறையிலும் பந்து வீசுவதினால் ஏற்பட்ட தடுமாற்றமே.
எவ்வாறாயினும் இப்போட்டியின் போது துணை நடுவராக செயலாற்றிய டொனி மெக்கியுலின் அமைதியாகவே இருந்துவிட்டார்.
1996 ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக முரளி உயிரியல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதனடிப்படையில் அவர் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்து வீசுகிறார் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கமைய அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
1998 1999 காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடியது. இப்போட்டியின் போது நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன். முரளி பந்து வீசிய வேளையில் அவர் முறையற்ற விதத்தில் பந்து வீசும் பாணி அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
அப்போது இலங்கை அணியின் தலைவராகக் கடமையாற்றிய அர்ஜுன ரணதுங்க நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு நின்றுவிடவில்லை, இந்தப்போட்டியை இத்தோடு நிறுத்திவிடுகிறோம் என்று கூறிய அர்ஜுன அணியை பெவிலியன் நோக்கி அழைத்துச் சென்றார்.
அப்போது குறுக்கிட்ட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் போட்டியை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு போட்டி மீண்டும் ஆரம்பமானது.
இந்தச் சம்பவத்தை அடுத்து அர்ஜுன ரணதுங்கவுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது. நடுவராக செயலாற்றிய ரொஸ் எமர்சனும் சுகயீன விடுமுறை என்று காரணம் காட்டி போட்டித் தொடலிருந்து விலகிக் கொண்டார்.
முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 500 வது விக்கெட்டை 2004 ம் ஆண்டு மார்ச் 16 ம் திகதி கண்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது வீழ்த்தியிருந்தார்.
இப்போட்டித் தொடரில் “துஸ்ரா' முறையில் பந்து வீசியிருந்தமை தொடர்பாக போட்டி நடுவராகக் கடமையாற்றிய கிறிஸ் பிரோட் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்திருந்தார்.
அதனால் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கமைய மருத்துவ தீர்வுகள் முரளிதரனுக்கு சாதகமாக அமைய, “துஸ்ரா' பந்து வீச்சினை வீசுவதற்கு முடியும் என ஐசிசி யினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2006 ம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் முரளி.
இதனடிப்படையில் “தூஸ்ரா' பந்து வீசப்படும் வேளையில் 12.2 பாகையில் கை மடங்கும் போது சராசரியாக மணிக்கு 86 கிலோ மீற்றர் வேகத்திலும் ஓவ் பிரேக் பந்து வீச்சின் போது 12.9 பாகையில் கை மடங்கும் அதேவேளை மணிக்கு 99.45 கிலோ மீற்றர் வேகத்திலும் பந்து வீசுகிறார் என்பது அறியப்பட்டது.
இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியினால் சிறப்பாக செயற்பட்ட முரளி பல அரிய சாதனைகளையும் நிலைநாட்டி விட்டுதான் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைகள்
1. டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (800)
2. ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (534)
3. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (1,334) 
4. டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் பெறுமதிகளை அதிக தடவைகள் கொண்டவர் (67)
5. 10 விக்கெட் பெறுமதிகள் அதிக தடவைகள் கொண்டவர் (22)
6. 10 விக்கெட் பெறுமதியான அனைத்து அணிகளுக்கு எதிராகவும் பெற்ற ஒரு வீரர்.  
7. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 350 விக்கெட்டுகளை பெற்றவர்.
8. டெஸ்ட் போட்டிகளில்  விரைவாக  400 விக்கெட்டுகளை பெற்றவர்.
9. டெஸ்ட்போட்டிகளில் விரைவாக 450  விக்கெட்டுகளை பெற்றவர்.
10. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 500 விக்கெட்டுகளை பெற்றவர்.
11. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 550 விக்கெட்டுகளை பெற்றவர்.
12. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 600 விக்கெட்டுகளை பெற்றவர்.
13. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 650 விக்கெட்டுகளை பெற்றவர்.
14. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 700  விக்கெட்டுகளை  பெற்றவர்.
15. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 750  விக்கெட்டுகளை பெற்றவர்.
 16. டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட் பெறுமதியைத் தொடர்ந்து 4 தடவை புரிந்த ஒரே வீரர்.
17. டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராக 50  விக்கெட்டுகளுக்கு அதிகமாக பெற்ற ஒரே வீரர்.
18. இங்கிலாந்தின் jim laker  உடன் 9 விக்கெட் பெறுமதியான இரு தடவைகள் வீழ்த்தியுள்ளார்.
19. டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர்.


    
 

 

1 ஏப்., 2011



வென்கடே மைதானமும் இந்திய இலங்கை அணிகளும் (சிறப்புக் கண்ணோட்டம்)
வீரகேசரி இணையம் | Views(772)
Friday 1 April 2011, 6:26 pm
    
 உலக விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை கடந்த ஒன்றரை மாதங்களுக்கும்  மேலாக தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட்  போட்டிகளின் நிறைவு நாளும் நெருங்கிவிட்டது. ஆம்! 10 ஆவது உலகக் கிண்ணக்  கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மும்பை வென்;கடே மைதானத்தில் நாளை  நடைபெறவுள்ளது. இதில் அடுத்த 4 வருடங்களுக்கு தாங்களே  கிரிக்கெட்டின்  ராஜாக்கள் என மார்தட்டிக் கொள்வதற்காக இலங்கையும் இந்தியாவும்  பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

 36 வருட வரலாற்றைக் கொண்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் இரண்டு ஆசிய  அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கமைய  மேற்கத்தைய நாடுகளின் மகத்துவமிக்க விளையாட்டாகத் திகழ்ந்த கிரிக்கெட் ஆசியாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது என்றால் மிகையாகாது. கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்துக்கும் அதனை ஆண்டாண்டு காலம் ஆண்டுவந்த அவுஸ்திரேலியாவுக்கும் இம்முறை அரை இறுதிப் போட்டிவரைகூட இடமில்லை என்பதுதான் இங்கு சுவாரஸ்யமான விடயம்.

1992ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஒரு வெளிநாட்டு அணியுடன் ஆசிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றமைதான் கடந்த உலக் கிண்ணத் தொடர் வரையான வரலாறாக இருந்தது. இம்முறை அந்த வரலாறு மாற்றியமைக்கப்பட்டு நான்கில் மூன்று ஆசிய அணிகளான இந்தியாஇ பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அதிலிருந்து இந்தியாவும் இலங்கையும் தற்போது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

இலங்கைக்கே வெற்றிக் கிண்ணம் என்பது இலங்கை ரசிகர்களின் நம்பிக்கையாகவும் இந்தியாவுக்கே வெற்றிக் கிண்ணம் என்பது இந்திய ரசிகர்களின் கருத்தாகவுமே தற்போதுள்ளது. எனினும். உண்மையில் எவ்வணி வெற்றிபெறும் என்பதுதான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள ஒரே கேள்வியாகும்.

இந்திய மற்றும் இலங்கை அணிகள் 1979ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 128 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இந்தியா 67 வெற்றிகளையும்இ இலங்கை 50 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எஞ்சிய 11 போட்டிகளும் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.

இலங்கைக்கு எதிராக இந்தியா அதிக பட்சமாக 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்களை 2009ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் குவித்துள்ளது. இது இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இந்தப் போட்டியில் பதிலளித்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்களைப் பெற்றது. இதுவே இந்தியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும்.

2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் வைத்து 26.3 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தமைதான் இலங்கைக்கு எதிராகப் பெற்ற குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை. இலங்கை அணி ஆகக்குறைவாக 1984ஆம் ஆண்டு சார்ஜாவில் 41 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

1987ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களைக் குவித்ததே மும்பை வென்;கடே மைதானத்தில் இந்தியா பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இதுவரை இந்த மைதானத்தில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பெற்றுள்ளது. அவற்றில் இலங்கையை இரண்டு தடவைகள் எதிர்கொண்டு அதில் ஒரு வெற்றியையும்இ ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

1987ஆம் ஆண்டு இந்தியா பெற்ற 299 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடி 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்றதே வென்;கடே மைதானத்தில் இலங்கை பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும். இது இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த மைதானத்தில் இந்தியாவைத் தவிர்த்து மேலும் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அவற்றில் ஒரு வெற்றியையும்இ ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது.

இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கனடாவுக்கு எதிராக கடந்த மார்ச் 13ஆம் திகதி நிய+ஸிலாந்து பெற்ற 358 ஓட்டங்களே மும்பை வென்;கடே மைதானத்தில் ஓர் அணி பெற்ற ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். 1998ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பங்களாதே~; அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றதே இம்மைதானத்தின் குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

இந்த வரலாற்றையும் மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவையும் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு 55 வீத வாய்ப்பும்இ இலங்கைக்கு 45 வீத வாய்ப்பும் உள்ளன. எனினும்இ இது வரலாற்றின் வெறும் கணிப்பே தவிர அண்மைக்கால போட்டிகளின் நிலையல்ல. அந்த வகையில் இரண்டு அணிகளும் இறுதி வரை வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்பதோடு இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கவும் அதிக வாய்ப்புள்ளது.

ஏனெனில்இ இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் அவ்வப்போது பிரகாசிக்கத் தவறுகின்றமை வரலாறாகும். அதுவும் இலங்கையுடனான வேறு பல இறுதிப் போட்டிகளில் இந்தியா கிண்ணத்தை கோட்டை விட்ட வரலாறும் இருக்கவே செய்கின்றது. ஆகவேஇ இறுதிப் போட்டியில் இந்தியாவுக்குத்தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறுவதில் அர்த்தமில்லை.
இரண்டு அணிகளுக்குமே சம அளவான வாய்ப்புகள் இருக்கின்றன. போட்டியன்று யார் சிறப்;பாகவும் சரியான தருணத்தில் நூறு வீதம் சிறப்பாகவும் செயற்படுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் எனலாம். இதுவே முன்னாள் ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லொய்ட்இ இந்தியாவின் கபில் தேவ்இ பாகிஸ்தானின் இம்ரான் கான்இ இலங்கையின் அர்ஜுன ரணதுங்கஇ அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் வோ ஆகியோர் ஒருமித்துக் கூறும் கருத்தாகும். இவர்கள் அனைவருமே தாங்கள் அணித்தலைவராக இருந்த காலப்பகுதியில் தமது அணிக்கு உலக சாம்பியன் மகுடத்தை ஈட்டிக்கொடுத்தவர்கள் என்பதுதான் சிறப்பம்சம்.

எவ்வாறாயினும்இ லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியான நிய+ஸிலாந்துக்கு எதிரான சவாலை மும்பை வென்;கடே மைதானத்தில் எதிர்கொண்ட இலங்கை அதில் 112 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியானது நாளைய போட்டியில் இலங்கை அணி வீரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.

ஆர்.கே.எஸ். 
 

உலகக் கிண்ணத்தை வெல்வது யார்? (சிறப்புக் கட்டுரை)
வீரகேசரி இணையம் | Views(785)
Friday 1 April 2011, 8:22 pm
e
    
ஆசிய அணிகளான இலங்கை மற்றும் இந்தியா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாளை 2ஆம் திகதி மும்பையில் பரஸ்பரம் எதிர்கொள்கின்றன. 36 ஆண்டு கால உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப்போட்டியில் இரு ஆசிய அணிகள் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பதற்றத்தையும், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக இது அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


இலங்கை

1996 உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பிக்கும் வரை இலங்கை கிரிக்கட் அணி ஒரு போட்டியை வென்றால் அது எதிரணியின் அதிர்ச்சித் தோல்வியாகவே கணிக்கப்பட்டது, 1996 உலகக் கிண்ண 'வெற்றிக்குப் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒரு போட்டியில் தோற்றால் அதை 'இலங்கை அதிர்ச்சித் தோல்வி" என்று சொல்லும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சியை இலங்கை அடைந்த காலப்பகுதி அது. அர்ஜுன, அரவிந்த, சனத், வாஸ், முரளி என்கின்ற பஞ்சபாண்டவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் இலங்கை கிரிக்கட் அணி தன்னை விஸ்வரூபப்படுத்திக் காட்டியிருக்க முடியுமா? என்றால் அதற்கு இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும். 1996 உலகக் கிண்ண போட்டிகளின் நாயகர்களான அர்ஜுனவும், அரவிந்தவும் 1999 உலக கிண்ண போட்டிகளில் இலங்கையின் படுதோல்விக்குப் பின்னர் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்பட்டது வரலாறு, இன்று அந்த வரலாற்றில் வாஸ{ம், சனத்தும் உள்ளடக்கம். எனினும் சூழ்நிலைக் காரணமாக சமிந்த வாஸ் இறுதிப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தெரிவுக்குழுவினர் சனத்தை தெரிவு செய்யாததைக் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், சமிந்த வாஸை தேர்வு செய்யாதது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. நீண்ட நாட்களாக இலங்கை அணியில் இடம் கிடைக்காத வாஸ் இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரருக்கான விருதினை வென்று தன்னை வெளிக்காட்டியிருந்தார். தற்போது இலங்கை பிராந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்துவீசி எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தார், ஆனால் இந்தப் போட்டிகளுக்கு முன்னதாகவே இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டது வாசினதும் இலங்கை கிரிக்கட் அணியினதும் துரதிர்~;டம்.

நுவான் குலசேகர, லசித் மலிங்க இருவருக்கும் பதிலாக சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாவிட்டாலும் டில்ஹார பெர்னாண்டோவுக்குப் பதிலாக கூடவா சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாது? இலங்கை ஆடுகளங்களில் குறிப்பாக பிரேமதாச ஆடுகளத்தில் வாஸ் அளவிற்கு சிறப்பாக பந்துவீசக் கூடிய பந்து வீச்சாளர் யாருமே சர்வதேச அளவில் இல்லை என்பதுதான் உண்மை. அடுத்து அண்மைக்கால இலங்கையின் நம்பிக்கை சுழல் பந்து வீச்சாளரான சுராஜ் ரன்திப் நீக்கப்பட்டு ரங்கன கேரத் சேர்க்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பது இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். அதேபோல உலகக் கிண்ண முக்கியஸ்தராக அணியில் இணைந்துள்ள சாமர சில்வா கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்துவாரா என்பது சந்தேகமே. எனினும் சுராஜ் ரன்தீவ் இறுதிப் போட்டியில் விளையாட அழைக்கபட்டுள்ளார்.

இப்படி அணியின் தெரிவுக்குழுவின் தெரிவின் மீது திருப்தியில்லா விட்டாலும் இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான சவாலைக் கொடுக்கக் கூடிய சிறந்த அணியாக இலங்கை உள்ளதையும் மறுக்க இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடுகளம், பந்துவீச்சாளர் பேதமில்லாமல் ஓட்டங்களை வேகமாக குவித்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் டில்~hன் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையின் மிகப்பெரும் பலம்.  அதே நேரம் டில்~hனுடன் களமிறங்கும் சக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உப்புல் தரங்கவை ஆரம்பத்தில் வெளியேற்றா விட்டால் தரங்கவினது ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

அடுத்து மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கும் குமார் சங்ககாரவை அவளவு இலகுவில் வெளியேற்ற முடியாது, அட்டைபோல ஆடுகளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்ககார யாராவதொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரருடன் இணைப்பாட்டத்தை ஏற்ப்படுத்தினால் இந்திய அணியின் கதை அவ்வளவுதான். தனது விக்கட்டை இழக்காமல் ஓட்டங்களைக் குவிக்கும் திறமையுடைய சங்ககார ஒருபுறத்தில் விக்கட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனித்து நின்று கணிசமான ஓட்டங்களைப் பெற்று போட்டியை பந்து வீச்சாளர்கள் கைகளிலாவது ஒப்படைக்கக் கூடியவர். ஆரம்ப நாட்களில் மந்தமாக இருந்த ஓட்டக் குவிப்பு வேகம் ஐ.பி.எல. போட்டிகளின் பின்னர் அதிகரித்திருப்பதும் இலங்கைக்கு பலம்.


நான்காம் இலக்கத்தில் களமிறங்கும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் பயிற்சி நிலை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணியின் பாடு திண்டாட்டமாகவும்; மோசமாக இருக்கும். வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை ரகத்தைச் சேர்ந்த மஹேலவின் ஓட்டக் குவிப்பிற்கு 2003 மற்றும் 2007 உலகக் கிண்ண போட்டிகள் சான்று. தனி மனிதனாக போட்டிகளின் முடிவை மாற்றக் கூடிய திறமையுடைய மஹேலவை வந்தவுடன் வெளியேற்றாவிட்டால் பின்னர் வெளியேற்றுவது எதிரணிக்கு சிரமமாக இருக்கும். சுழல் பந்துவீச்சிற்கு மிகவும் சிறப்பாக ஆடும் மஹேலவுடன் இலங்கையின் மத்திய வரிசைக்கு பலம் சேர்க்கும் இன்னுமொரு வீரர் திலான் சமரவீர.


சாமர சில்வா, கப்புகெதர இருவரையும்விட திலான் சமரவீர ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். அண்மைக்காலமாக இவரது ஆட்டத்தில் ஏற்;பட்ட மிகப்பெரும் மாற்றம் இவரது வேகமான ஓட்டக் குவிப்புத்தான். நல்ல ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்கும் போட்டிகளைக் கொண்டு செல்வதற்கு திலான் சமரவீர மிகவும் பொருத்தமாக இருப்பார். ஆறாம் இலக்கத்தில் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் ஏழாம் இலக்கத்தில் திசர பெரேரா இருவரும் இறுதிநேர அதிரடிக்கு உதவக் கூடியவர்களாயினும் அவர்களில் மத்யூஸ் எதிரணியின் ஓட்டங்களை துரத்தும்போது போட்டியின் தன்மைக்கேற்ப ஆடக் கூடியவர். இந்நிலையில் மத்தியூசுக்கு அரையிறுதி போட்டியின் போது முழுங்காலில் காயம் ஏற்பட்டது. எனவே நாளைய போட்டியில் விளையாடுவது பெரும்பாலும் சந்தேகமாகவே உள்ளது. எனவே இவருக்கு பதில் வீரராக சகலதுறை ஆட்டக்காரர் சமந்தவாஸ் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பந்து வீச்சை பொறுத்தவரை 2011 உலகக் கிண்ண போட்டிகளில் மிகவும் சிறந்த பந்துவீச்சு வரிசை என்று இலங்கை அணியைச் சொல்லலாம். அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கக் கூடிய முரளிதரன் மற்றும் லசித் மலிங்கவுடன் ஆசிய அணிகள் தவிர்த்து எந்த அணியையும் நிலைகுலைய வைக்கும் திறமையுடைய அஜந்த மென்டிஸ் அணியில் இருப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம். இவர்கள் தவிர கடந்த ஓராண்டுக்கு மேலாக தரவரிசையின் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வரும் நுவான் குலசேகரவும்; சகலதுறை வீரர்களாக பந்துவீச்சில் அண்மைக்காலமாக பிரகாசிக்கும் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திசர பெரேராவும் இலங்கை பந்துவீச்சு வரிசையின் பலம். 

ஆனாலும் பலமான இந்தியாவை இலங்கை எதிர்கொள்வது மிகவும் சவாலான விடயமாகத்தான் இருக்கும். 1996 உலகக் கிண்ண வெற்றியின் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளில் அரைஇறுதிக்கும் 2007 உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கும் தெரிவான இலங்கை அணி இம்முறை கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றுமா? என்கின்ற கேள்விக்கு கைப்பற்றுவதற்கு தகுதியான அணிதான் என்பது சரியான பதிலாக இருக்கும்.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து பதினொருவர் தெரிவு 
திலகரட்ன டில்ஷான் உப்புல்; தரங்க குமார் சங்ககார (தலைவர்), (விக்கட் காப்பாளர்) மஹேல ஜெயவர்த்தன திலான் சமரவீர அஞ்சலோ மத்யூஸ் திசர பெரேரா நுவான் குலகேகர முத்தையா முரளிதரன் லசித் மலிங்க அஜந்த மென்டிஸ்
மிகுதி நால்வரும்
சாமர கப்புகெதர சாமர சில்வா டில்ஹார பெர்னாண்டோ ரங்கன ஹேரத்

இந்தியா

ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த அனைத்து நாடுகளிலும் கிரிக்கட் மோகம் இருந்தாலும் இந்தியா அளவிற்கு கிரிக்கட்மீது வெறிகொண்ட ரசிகர்கள் வேறெந்த ஆங்கில காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகளிலும் இல்லை என்றே சொல்லலாம். வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும்போது வீரர்களைக் கொண்டாடும் ரசிகர்கள் தோல்விகளைச் சந்திக்கும்போது தாம் கொண்டாடிய வீரர்களையே வசைபாடுமளவிற்கு கிரிககெட்டின்மீது அதீத ஈடுபாடுடையவர்கள். இப்படி கிரிக்கெட்டை ஒரு மதமாகப் பார்க்கும் இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கு சொந்த நாட்டிலே உலகக் கிண்ண இறுதிப் போட்டி இடம்பெறும்போது உணர்வு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 1983 முதல் 28 ஆண்டுகளாக உலகக் கிண்ணக் கனவுடன் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கும்; ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கான அதிகமான சாதனையை தன்னகத்தே வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு மணிமகுடமாகவும் இந்த உலகக் கிண்ணம் இந்தியாவிற்கு மிகவும் அவசியமானது.


பலமான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி 1983 இல் தனது முதல் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இந்தியா அதன் பின்னர் ஐசிசி நடாத்திய சுற்றுப் போட்டிகளில் இலங்கையுடன் 2002 இல் இணை சாம்பியனாக கிண்ணத்தைப் பகிர்ந்து கொண்டதுடன்; ஐசிசியின் முதல் 20-20 உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளது. 2003 உலகக் கிண்ண போட்டிகளில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணிக்கு கிண்ணத்தை வெல்வதற்கு அவுஸ்திரேலியா அனுமதிக்கவில்லை. அதேபோல அடுத்த உலகக் கிண்ண போட்டிகளில் (2007) அடுத்த சுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறுவதற்கு பங்களாதே~; முட்டுக்கட்டையாக இருக்குமென்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2003 உலகக் கிண்ண போட்டிகளில் இந்தியாவின் வெளியேற்றம் பல முன்னணி வீரர்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது நினைவில் இருக்கும் என்பதால் இம்முறை இந்தியர்கள் மிகவும் அவதானமாகவே இறுதிப் போட்டியிலும் ஆடுவார்கள் என்று நம்பலாம்.

இந்திய அணியின் மிகப்பெரும் பலம் என்று சொல்வதென்றால் அது அவர்களின் ஸ்திரமான துடுப்பாட்ட வரிசைதான். அணியிலுள்ள 8 துடுப்பாட்ட வீரர்களில் ஏழு வீரர்களை அணியில் தெரிவு செய்வதே அணித் தேர்வின்போது மிகவும் சிரமமான விடயமாக இருக்கும் என்பதில் இருந்து இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையின் பலத்தை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றாற்போல சிறப்பான வீரர்கள் துடுப்பாட்ட வரிசையில் இருப்பது இன்னமும் சிறப்பு.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உலகின் சிறந்த ஜோடியான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர செவாக் இவர்கள் இருவரையும் பற்றி என்ன சொன்னாலும் அது எல்லோருக்குமே தெரிந்த விடயமாகத்தான் இருக்கும் என்பதால் இவ்விருவரையும் பற்றி அதிகமாக சொல்லத் தேவை இல்லையென்றாலும் சவாக்கை முதல் பத்து ஓவர்களுக்குள் வெளியேற்றத் தவறினால் ஏற்ப்படும் விளைவையும் சச்சின் தனது முழுமையான இனிங்;ஸ் ஒன்றை வெளிப்படுத்துவதால் ஏற்ப்படும் விளைவையும் இலங்கை அணி  அறியாமல் இல்லை என்பதால் இந்தியாவுடனான போட்டியில் இவ்விருவரையும் வெளியேற்றுவதற்குத்தான் அவ்வணியினர் அதிக சிரத்தை எடுப்பார்கள்.

வேகம், சுழல் பந்து வீச்சுகளுக்கும்; ஓப், ஓன் திசைகளிலும்; நேர்த்தியாகவும், வேகமாகவும்; போட்டியின் தன்மைக்கேற்ப துடுப்பாடக்கூடிய இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கௌதம் கம்பீர் மூன்றாம் இலக்கத்திற்கு வலுச்சேர்க்கும் அதேநேரம் இன்னுமொரு எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான மிகச்சிறந்த பயிற்சி நிலையிலிருக்கும் வீராட் கோளி நான்காம் இலக்கத்திற்கு சிறப்பான வீரராக இருப்பார். நான்காம் இலக்கத்திற்கு அனுபவம் குறைவான வீரராக கோளி இருப்பினும் அதுவே அவருக்கு அழுத்தமில்லாமல் ஆடுவதற்கு எதுவாக அமைந்து விடும் என்பதால் கோளி நான்காம் இலக்கத்திற்கு சரியான தெரிவாக இருப்பார்.

ஐந்தாம் இலக்கத்திற்கு யுவராஜ் சிங்கை அணியில் இணைப்பதா அல்லது சுரே~; ரெய்னாவை இணைப்பதா என்பதுதான் பிரச்சியாகவே இருந்தது. ஆனால் இத் தொடரில் யுவராஜ் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற பெயரை நிலைநாட்டினார். எனவே ஐந்தாம் இலக்கத்தில் யுவராஜ் விளையாடும் சந்தர்ப்பம் அதிகம். எனினும் இறுதிப் நாள் போட்டி அவர்களுடையதாக அமையும் பட்சத்தில் ரெய்னாவை விட யுவராஜ் சிங்கின் இனிங்க்ஸ் மிரட்டக்கூடியதாக அமையும் என்பது யாராலும் மறுக்க முடியாதது. அடுத்து கையைவிட்டுப் போன ஒரு போட்டியை மீண்டும் இந்தியாவின் கைகளுக்குள் கொண்டுவரும் ஆற்றல் படைத்த ஒரே வீரர் யுவராஜ்தான் என்பதாலும் யுவராஜ் அணியில் இருப்பது இந்திய அணிக்குத்தான் சிறப்பு.

ஆறாம் இலக்கத்தில் டோனி இன்று சிறந்த பயிற்சி நிலையில் இல்லாதது இந்தியாவிற்கு பாதகமான விடயமாக இருந்தாலும் டோனி போன்ற வீரர்களுக்கு பயிற்சி நிலையாக ஒரு போட்டி போதும் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். டோனியுடன் சேர்ந்து இணைப்பாட்டம் கொடுப்பதற்கு யூசுப் பதான் ஏழாம் இலக்கத்தில் களமிறங்குவதும்; எட்டாம் இலக்க வீரராக களமிறங்கும் ஹர்பஜனின் அதிரடியும் இந்திய துடுப்பாட்ட வரிசையின் பலமான விடயங்கள். ஆசிய ஆடுகளங்கள் என்பதால் இந்திய அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்துவது எதிரணியினருக்கு மிகவும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


துடுப்பாட்டத்தில் இந்திய அணி எப்படி பலமாக உள்ளதோ அதற்;கு நேர்மாறாக பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் பலவீனமாக உள்ளதுதான் இந்திய அணியின் பிரச்சினையே. சஹீர்;கான், ஹர்பஜன் சிங்; இவ்விருவரையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசை உள்ளது. ஆடுகளங்கள் ஒத்துழைக்கும் பட்சத்தில் சிறப்பாக பந்துவீசும் சஹீரை எல்லா நேரங்களிலும் நம்ப முடியாது. ஆசிஸ் நெஹ்ரா, முனாப் பட்டேல் போன்றவர்களை அன்றைய நாள் நன்றாக இருந்தால் மட்டுமே நம்ப முடியும். களத்தடுப்பு ஆயிரம் பெரியார் வந்தாலும்...... போன்ற விடயம் தான்.


மிகப்பெரும் ஓட்ட எண்ணிக்கையை இந்தியா குவித்தாலும், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிரணியைக் கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகவே இருக்கும். இந்தியா ஓட்டக் குவிப்பாலும் சஹீர், ஹர்பஜன் மற்றும் பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர்களான N~வாக், யூசுப், சச்சின், யுவராஜ் அல்லது ரெய்னா போன்றவர்களினது துணையினாலும் எதிரணியினருக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பார்கள் என்று நம்பலாம். 2011 உலக கிண்ணத்தை வெல்வதற்கு சாத்தியமான அணி என்று பலராலும் ஆரூடம் கூறப்படும் இந்தியா இத்தடவை உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
15 பேர் கொண்ட குழாமிலிருந்து பதினொருவர் தெரிவு 
சச்சின் டெண்டுல்கர் விரேந்திர செவாக் கௌதம் கம்பீர் வீராட் கோளி யுவராஜ் சிங் மகேந்திரசிங் டோனி (தலைவர்), (விக்கட் காப்பாளர்) யூசுப் பதான் ஹர்பஜன் சிங் சஹீர் கான் ஆசிஸ் நெஹ்ரா முனாப் பட்டேல்
மிகுதி நால்வரும்
சுரேஷ் ரெய்னா ரவிச்சந்திரன் அஷ்வின் பியூஸ் சாவ்லா பிரவீன் குமார்

இப்ப சொல்லுங்க, எந்த அணி கிண்ணத்தைக் கைப்பற்றும் என்று எதிர்வு கூறமுடியுமா?  கிண்ணத்தை வெல்லப்போகும் நாடு எதுவென்பதை நாளை(ஏப்ரல் 2) வரை மிகுந்த எதிர்பார்ப்புடன், பரபரப்புடன், ஒருவித பதற்றத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம்.