ஞாயிறு, 03 நவம்பர் 2013 15:03
சேலம், நவ. 3- 28-ஆவது தேசிய தேகுவாண்டோ போட்டிகள் கடந்த 25, 26, 27.10.2013 ஆகிய மூன்று நாட்கள் சேலம் நெய்க்காரப்பட்டி பொன்னா கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றன. இந்திய தேகுவாண்டோ அமைப்பின் தலைவர் மாஸ்டர் பி.வி.ரமணய்யா, பொதுச் செயலாளர் மாஸ்டர் டிவிவி. பிரசாத், தமிழகப் பொதுச்செயலாளர் மாஸ்டர் ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத் தினர். இந்திய முழுவதிலுமிருந்து 320 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் அதிக பதக்கங்களை வென்று தமிழக அணி ஒட்டு மொத்த சாம்பியன் கோப் பையைக் கைப்பற்றியது. தொடர்ந்து நான்காவது முறையாக தமிழக அணி ஒட்டுமொத்த கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
காஞ்சிபுரத்திலிருந்து மூத்த பயிற்சியாளரும், காஞ்சி மாவட்ட அமைப்பின் பொருளாளருமான வி.ஜி.ஜெயக்குமார், பொதுச்செயலாளரும், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் காஞ்சி மாவட்டத் தலைவருமான காஞ்சி கதிரவன், பயிற்சியாளர் தெ.செந்தாமரைக் கண்ணன் ஆகியோருடன் 45 போட்டியாளர்கள் பங்கேற்று 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதங்ககங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர் களுக்குப் பாராட்டு விழா 31.10.2013 மாலை 7 மணியளவில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண்டோ அமைப்பின் தலைவர் சிவிஎம் அ.சேகர் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாணவர் களைப் பாராட்டினார். பாக்ஸ்கான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எச்.ஆர்.மேனேசர் சகாயராஜ், நிதி மேலாளர் கிஷோர், வழக்குரைஞர் சிவிஎம்பி.எழிலரசன் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி மேலும் பல சாதனைகளை படைக்க உற்சாகப்படுத்தினர்.
தேகுவாண்டோ அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் குட்டி (எ) ஜெயக்குமார், கவிதா மெடிக்கல்ஸ் ஜீவா, சுழற்சங்கம் ஹரிஹரன் பயிற்சியாளர்கள் சி.பிரகாஷ், ப.பரணிதரன், பெரியார் பிஞ்சு உ.க. அறிவரசி, க.சக்திகுமார், த.சத்தியராஜ், தமிழ்வாணன், ராஜா, தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமான மாண வர்களும், பெற்றோர்களும் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.
தங்கம் வென்றோர்: யு.கே.அறிவரசி, எஸ்.ஜே. அர்ச்சனா பாரதி, எஸ்.ஜே.அருண் விஸ்வநாத், மு.சிபி, சி.கீர்த்தி வாசன், பி.சந்தோஷ், ஜே.நந்தகுமார், ஏ.நந்தினி, சி.பிரகாஷ், டி.ராம்குமார் (இரண்டு தங்கம்), டி.திருக்குமாரன் (இரண்டு தங்கம்).
வெள்ளி வென்றோர்: எஸ்.டி.தருண், ஜி.கபிலன், எச்.கார்த்திக் குமார், இ.சரஸ்வதி. எஸ்.கௌதம், வி.அபர்னா, ஆர்.சூரியக்குமார். ஜே.பரத்வாஜ், வி.பரத், யு.கே.அறிவரசி, எஸ்.மணிகண்டன் (இரண்டு வெள்ளி), எச்.கேசவ் ராஜ்.
வெண்கலம் வென்றோர்: எஸ்.ஜே.அருண் விஸ்வநாத், பி.அஜித்குமார், என்.ரிஷட்வர்மன், என்.பாலமுருகன், எம்.விஜயசாரதி, எச்.பிருத்திவிராஜ், இ.காயத்திரி, எஸ்.ராமகிருஷ்ணன், எச்.ரதியா.
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கால் இறுதியில் நடால்
பாரிஸ், நவ.3- பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, நம்பர் 1 வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் போலந்தின் ஜெர்சி ஜானோவிக்சுடன் மோதிய நடால் 7,5, 6,4 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 3ஆவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜான் அய்ஸ்னருடன் மோதிய 2ம் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6,7 (5,7) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் அவர் 6,7 (5,7), 6,1, 6,2 என்ற செட் கணக்கில் வென்றார்.