7 ஜூன், 2010

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம்

தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கும் 19ஆவது உலகக்கிண்ண கால்பந்துப் போட்டிகள் ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
1930 ஆம் ஆண்டு முதன்முறையாக உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நடந்தது. அன்று முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 18 உலகக்கிண்ண போட்டிகள் இதுவரையில் நடைபெற்றுள்ளன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆம் ஆண்டுகளில் இப்போட்டிகள் நடத்தப்படவில்லை.
போட்டிகளில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். போட்டியை நடத்தும் நாடு தவிர மற்ற 31 அணிகள் தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டிகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடைபெறும்.
4ஆவது ஆண்டு முடிவில் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் உலகக்கிண்ண போட்டியில் விளையாடும். இதுவரை நடந்த 18 போட்டிகளில் 7 நாடுகள்தான் திரும்பத் திரும்ப பீபா கிண்ணத்தை வென்றுள்ளன. பிரேசில் அதிகபட்சமாக 5 முறை சம்பியனாகியுள்ளது.
நடப்புச் சாம்பியனான இத்தாலி 4 முறையை சம்பியனாகவும், அதற்கு அடுத்த இடத்தில் ஜேர்மனி 3 முறை சம்பியான் பட்டத்தையும் வென்றுள்ளது. உருகுவே, ஆர்ஜென்டினா அணிகள் தலா 2 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தலா ஒரு முறையும் பீபா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. இதுவரை 76 நாடுகள் ஒவ்வொரு முறையேனும் உலகக் போட்டிகளில் பங்கேற்றுள்ளன.
2006 இல் ஜேர்மனியில் நடந்த உலகக்கிண்ண போட்டியை சுமார் 71.51 கோடி மக்கள் தொலைக்காட்சியிலும், நேரிலும் கண்டுகளித்துள்ளனர். 2010 க்கு அடுத்தபடியாக 2014இல் பிரேசிலில் போட்டி நடைபெறவுள்ளது.
உலகிலுள்ள விளையாட்டுக்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் பட்டியலில் முதலாவது இடத்தில் பீபா உலகக்கிண்ண போட்டிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: