24 மே, 2011


05th Mar 2011
எல்லாம் அர்ஜென்டினாவில்தான்; ஒரே போட்டியில் 36 'சிவப்பு அட்டை'
 அர்ஜென்டினாவில் நடந்த உள்ளுர் போட்டி ஒன்றில் பங்கேற்ற வீரர்கள், மாற்று வீரர்கள் உள்பட 36 பேருக்கு சிவப்பு அட்டைக் காட்டி ஒரு நடுவர் சாதனை படைத்தார்.
 அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடந்த உள்ளுர் ஆட்டம் ஒன்றில் விக்டோரியானா ஏரானாஸ் மற்றும் கிளேபோலே அணிகள் மோதின.இந்த போட்டிக்கு நடுவராக டொமியன் ரூபியானோ என்பவர் பணியாற்றினார்.போட்டி துவங்கியது முதலே இரு அணி வீரர்களுக்கும் அடிக்கடி தகராறும் மோதலும் ஏற்பட்டு கொண்டே இருந்தது. ஒவ்வொரு பந்தையும் எடுக்கும் போது எதிர் அணி வீரர்களை அடித்து வீழ்த்துவதிலேயே குறியாக இருந்தனர்.
 இது போதாது என்று கரையில் இருந்த மாற்று ஆட்டக்காரர்களும் உதவி நடுவருடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.இதையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர் ரூபியான் இரு அணியின் 11 வீரர்களுக்கும் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். மேலும் கரையில் இருந்த 14 மாற்று ஆட்டக்காரர்களுக்கும் கூட சிவப்பு அட்டை கிடைத்தது.
 போட்டி நிறுத்தப்பட்டதும் டிரெஸ்சிங் அறையிலும் இரு அணி வீரர்களுக்கும் இடையே சண்டை தொடர்ந்தது.அப்போது போலீசார் தலையிட்டு மோதலை தடுத்தனர்.இரு அணி வீரர்களுக்கும் நேரடி சிவப்பு அட்டைக் காட்டப்பட்டதால் தொடர்ந்து 3 போட்டிகளுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 இதற்கு முன் கடந்த 1993ம் ஆண்டு பாரகுவேயில் நடந்த ஆட்டம் ஒன்றில் 20 சிவப்பு அட்டை காட்டப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

29th Apr 2011
நடுவர்கள் உதவியுடன்தான் பார்சிலோனா ஜெயிக்கிறது-ரியல்மாட்ரிட் பயிற்சியாளர் ஜோஸ் மோரின்ஹோ குற்றச்சாட்டு

  முக்கிய போட்டிகளில் நடுவர்களின் உதவியுடன்தான் பார்சிலோனா வெற்றி பெறுகிறது என்று ரியல்மாட்ரிட் பயிற்சியாளர் ஜோஸ் மோரின்ஹோ குற்றம் சாட்டியுள்ளார்.
 சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா 2-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட்டை தோற்கடித்தது.இந்த ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் வீரர் பெப் சிவப்பு அட்டைக் காட்டி வெளியேற்றப்பட்டார்.தொடர்ந்து ரியல்மாட்ரிட் பயிற்சியாளரும் களத்தை விட்டு வெளியேற்றப்£ட்டார். இந்த போட்டி முடிந்ததும் ரியல் பயிற்சியாளர் ஜோஸ் மோரின்ஹோ ஆவேசத்துடன் பேட்டியளித்தார்.
 ''ஒரு நடுவர் இரு அணியையும் சமமாக நடத்த வேண்டும்,ஆனால் ஒவ்வொரு முக்கிய ஆட்டங்களிலும் பார்சிலோனாவுக்கு சாதகமாகவே நடுவர்கள் செயல்படுகின்றனர். 'யூபா'வும் பார்சிலோனாவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. இதற்கு காரணம் 'யுனிசெப்' அமைப்புடன் பார்சிலோனா இணைந்திருப்பதே.பார்சிலோனாவை சமூகத்துக்கு உதவும் ஒரு கால்பந்து கிளப்பாக பார்க்கின்றனர்.இதனால் அனைவருக்கும் பார்சிலோனா மேல் ஒரு கருணை பார்வை உள்ளது.''
 ''போர்ட்டோ, இன்டர்மிலான் அணிகளுடன் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை நான் வென்றேன். ஆனால் பார்சிலோனா பயிற்சியாளர் கார்டியாலா நடுவர்கள் உதவியுடன்தான் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றார். கடந்த 2008ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி ஆட்டத்தில் செல்சியை நடுவர்களுடன் உதவியுடன்தான் பார்சிலோனா வென்றது. அதே போலவே இப்போது ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியுள்ளது என்றார்.''
 ஜோஸ் மோரின்ஹோவின் இந்த குற்றச்சாட்டுக்கு பார்சிலோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தனது வீரர்கள்,ரசிகர்கள்,பயிற்சியாளர் உள்பட அனைவரையும் ஜோஸ் மோரின்ஹோ அவமானப்படுத்தியுள்ளதாக பார்சிலோனா கருதுகிறது.எனவே மோரின்ஹோ மீது 'யூபா'வில் புகார் அளிக்க பார்சிலோன முடிவு செய்துள்ளது

'பிபா'தலைவர் தேர்தல்: ஜோசப் பிளேட்டர் மீண்டும் போட்டியிடுகிறார்

பிளேட்டருடன் முகமது பின் ஹமாம்
 'பிபா' தலைவருக்கான தேர்தலில் ஜோசப் பிளேட்டர் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஆசிய கால்பந்து சம்மேளனத் தலைவர் முகமது பின் ஹமாம் தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார்.
 உலக கால்பந்து சம்மேளனமான 'பிபா'வில் தொடர்ந்து 3 முறை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜோசப் பிளேட்டர் தலைவராக உள்ளார்.அதாவது 13 ஆண்டுகாலம் 216 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட உலகின் மிகப் பெரிய அமைப்பான 'பிபா'வின் தலைவராக ஜோசப் பிளேட்டர் கோலோச்சுகிறார்.அவரது பதவி காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க ஜுன் 1ந் தேதி 'பிபா' காங்கிரஸ் கூடுகிறது.தொடர்ந்து இந்த முறையும் 4வது தடவையாக ஜோசப் பிளேட்டர் தேர்தலில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஆசிய கால்பந்து சம்மேளனத் தலைவர் முகமது பின் ஹமாம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.தற்போது 61 வயது நிரம்பிய முகமது பின் ஹமாம் கத்தார் நாட்டை சேர்ந்தவர். வருகிற 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகத்தாரில் நடக்க உள்ளது.இந்த வாய்ப்பை கத்தார் பெறுவதற்கு முகமது பின் ஹமாம்தான் முக்கிய காரணம்.
 ஜோசப் பிளேட்டர் எதிர்த்து முகமது பின் ஹமாம் களம் இறங்கும்பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கம் எனத் தெரிகிறது. இதனால் பிளேட்டர் போட்டியை தவிர்க்க முயன்று வருகிறார்.தற்போது ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜோசப் பிளேட்டர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. குட்டி நாடான கிழக்கு தைமூருக்கு சென்ற  பிளேட்டர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிளேட்டர், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் ஆனால் இதுதான் கடைசி முறை என்றும் கூறினார்.
 தொடர்ந்து மலேசியா சென்ற அவர் அங்கு வைத்து முகமது பின் ஹமாமை சந்திக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.ஆனால் பல்வேறு காரணங்களால் அவரை சந்திக்கும் வாய்ப்பு கைகூடவில்லை. இதற்கிடையே கடந்த வெள்ளியன்று தோகாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முகமது பின் ஹமாம் 'பிபா' தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்தார்.
 

22 மே, 2011


அரைஇறுதிக்கு சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை தகுதி: டெல்லி அணிக்கு கடைசி இடம்


அரைஇறுதிக்கு சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை தகுதி: டெல்லி அணிக்கு கடைசி இடம்
சென்னை, மே. 22- 
 
4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. ஏற்கனவே உள்ள 8 அணிகளோடு இந்த முறை புதிதாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய 2 அணிகள் பங்கேற்று விளையாடின.  
 
“லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இன்றுடன் “லீக்” ஆட்டம் முடிகிறது. ஆனால் நேற்றைய போட்டி முடிவிலேயே தெரிந்துவிட்டன.
 
டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.  
 
கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தையும், வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 13 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தையும் பிடித்தன. டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் தலா 12 புள்ளியுடன் உள்ளன. இதில் ரன் ரேட்டில் முன்னிலை பெற்றதால் டெக்கான் 7-வது இடத்தையும், கொச்சி 8-வது இடத்தையும் பிடித்தன.
 
புனே, டெல்லி அணிகள் தலா 9 புள்ளியுடன் இருந்தன. ரன்ரேட் அடிப்படையில் புனே 9-வது இடத்தைப் பிடித்தது. டெல்லி அணி கடைசி இடத்தை பிடித்தது.  
 
இந்த முறை அரை இறுதி சுற்று “பிளே ஆப்” முறையில் நடத்தப்படுகிறது. “லீக்” முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு ஒரே மாதிரியான வாய்ப்பு இல்லை. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கும் வகையில் “பிளே ஆப்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
முதல் இடத்தையும், 2-வது இடத்தையும் பிடிக்கும் அணி மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு முடிந்து விடவில்லை. அந்த அணி, 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு நுழையும் மற்றொரு அணியாகும்.
 
 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் ஆட்டத்தில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

14 மே, 2011



TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Chennai Super Kings12840016+0.5441838/225.11708/224.1
Mumbai Indians11830016+0.3141562/215.21507/217.1
Royal Challengers Bangalore11730115+0.8631607/186.31539/198.3
Kolkata Knight Riders11740014+0.4641493/199.41460/208.1
Rajasthan Royals12560111-0.5871456/209.11570/208.0
Kings XI Punjab11560010-0.3381706/215.41713/207.4
Kochi Tuskers Kerala12570010-0.6281662/229.01740/220.4
Pune Warriors1147008-0.0031521/207.31601/218.2
Delhi Daredevils1248008-0.3631890/238.21906/229.5
Deccan Chargers1138006-0.177