25 மார்., 2014

அமெரிக்காவில் நடை பெற்று வரும் மியாமி மாஸ் டர்ஸ் டென்னிஸ் போட்டி யின் 4ஆவது சுற்றுக்கு இரண்டு முறை வாகையர் பட்டம் வென்ற ஃபெடரர், நடப்பு வாகையர் ஆன்டி முர்ரே ஆகியோர் முன்னேறி னர்.
திங்கள்கிழமை இப் போட்டியின் 3ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. தரவரிசையில் 5ஆவது இடத் தில் உள்ள ஃபெடரரும், நெதர்லாந்தின் தீமோ டி பக்கரும் மோதினர். ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில் ஃபெடரர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் ஃபெடரர், ஃபிரான் ஸின் ரிச்சர்டு கேஸ்கேவை எதிர்கொள்கிறார்.
ஸ்பெயினின் ஃபெலிசி யானோ லோபஸக்கு எதி ரான ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மற்ற ஆட்டங் களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், ஜப்பானின் கீ நிஷி கோரி, ஃபிரான்ஸின் ரிச்சர்டு கேஸ்கே, சோங்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மகளிர் பிரிவு 3ஆவது சுற்றில் அமெ ரிக்காவின் மேடிசன் கீஸ நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் சீனாவின் லீ நா.

மலேசிய கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன்: இளம் வீரர்கள் பங்கேற்பு
மலேசியாவில் நடை பெறவுள்ள பாட்மிண்டன் கிராண்ட் ப்ரீ போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்காததைத் தொடர்ந்து, இளம் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு கூடி யுள்ளது.
அடுத்தடுத்த போட் டிகளில் பங்கேற்றதைத் தொடர்ந்து ஓய்வு தேவைப் படுவதால், முன்னணி வீர ரான காஷ்யப், வீராங்கனை கள் சாய்னா நெவால், பி.வி. சிந்து ஆகியோர் மலேசிய பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்கவில்லை.
அதனால் சவுரவ் வர்மா, எச்.எஸ். பிரணாய், சாய் பிரணீத், குரு சாய் தத் மற்றும் அருந்ததி பண்ட்வானா ஆகிய இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட் டியின் தகுதிச் சுற்று செவ் வாய்க்கிழமை தொடங்கு கிறது.
சமீபத்தில் நடைபெற்ற டாடா ஓபன், ஆஸ்திரேலிய மற்றும் ஈரான் சர்வதேச போட்டிகளில் சவுரவ் வர்மா பட்டம் வென்றார்.
சிறந்த ஃபார்மில் உள்ள அவர், பிற நாடுகளைச் சேர்ந்த முன் னணி வீரர்களுக்கு மலேசி யாவில் அதிர்ச்சி அளிப்பார் என்று கருதப்படுகிறது.

திருச்சியில் அண்ணா பல்கலை. 20.3.2014 அன்று நடத்திய 2013-2014 ஆண்டு விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான வாகையர் பட்டம் சிவில் துறைக்கும், பெண்களுக்கான வாகையர் பட்டம் எலக்ட்ரிக்கல் எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைக்கும் கிடைத்தது.
ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் வாகையர் பட்டம் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைக்கு கிடைத்தது. இந்நிகழ்வில் முக்கிய விருந்தினர் முகமது நிசாமுதின் பரிசுகளை வழங்கினார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் நடை பெற்று வரும் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நடால், மகளிர் பிரிவில் செரீனா வில் லியம்ஸ் மற்றும் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் வெற்றிபெற்று அடுத்த சுற் றுக்கு முன்னேறினர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டி யின் ஆடவர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயி னைச் சேர்ந்த ரஃபேல் நடால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நம்பர் - 1 வீரர் ஹெவிட்டை எதிர்கொண் டார். 66 நிமிட போராட்டத் துக்குப் பின் நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வெற் றிப் பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபனில் வாகையர் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ் லஸ் வாவ்ரிங்கா, 6-0, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெ யினின் டேனியல் ஜிமினோ ட்ரேவரை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் ஃபிரான்ஸின் ரோஜர் வேஸ லின், ஸ்பெயினின் ராபெர்டோ, ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கர், இத்தாலியின் ஃபே பியோ ஃபோக்னி, அமெரிக் காவின் ஜான் அய்ஸ்னர் ஆகி யோர் 2ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சை எதிர்த்து 3ஆவது சுற்றில் ஆட இருந்த ஃபுளோரியன் மேயர் காயம் காரணமாக விலகியதால், ஜோகோவிச் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மகளிர் பிரிவில் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ் 45 நிமிட போராட்டத்துக்குப் பின் பிரான்ஸின் கரோலின் கார்ஸி யாவை வீழ்த்தினார். கடந்த முறை இறுதிச் சுற்றுக்கு முன் னேறிய மரியா ஷரபோவா, 3ஆவது சுற்றில் செக் குடிய ரசின் லூசி சஃபரோவாவை போராடி வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் ஜெர் மனியின் ஏஞ்சலிக் கெர்பர், செர்பியாவின் அனா இவா னோவிச், செக்குடியரசின் பெட்ரோ குவிட்டோவா வெற்றி பெற்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் இணை, ஆஸ்திரேலியாவின் அலெக் ஸாண்டர் பெயா, பிரேசிலின் ப்ருனோ சோரஸ எதிர் கொண்டது. இதில் பூபதி - ஆண்டர்சன் இணை தோல் வியடைந்தது.
இருப்பினும், இந்தியா வின் ரோஹன் போபண்ணா மற்றும் பாகிஸ்தானின் குரேஷி  இணை காலிறுதிக்கு முந் தைய சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஹாக்கி போட்டிகள்
சீனியர் ஆடவர் தேசிய வாகையர் பட்டப் போட்டி யின் இறுதிச் சுற்றில் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை அணியை வீழ்த்தி வாகையர் பட்டத்தைத் தக்க வைத்தது ஏர் இந்தியா அணி.
உத்தரப் பிரதேசத்தின் லக்னவ் நகரில் உள்ள தயான் சந்த் மைதானத்தில் 4ஆவது தேசிய வாகையர் பட்டப் போட்டியின் (டிவிஷன் ஏ) இறுதி ஆட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் 4-1 என்ற கோல் கணக் கில் நடப்பு வாகையரான ஏர் இந்தியா வெற்றி பெற்றது. ஏர் இந்தியா அணியின் கன்ப்ரீட் சிங் (14, 29 மற்றும் 39ஆவது நிமிடம்) ஹாட்ரிக் கோல் அடித்தார்.
கடைசி நேரத்தில் ஏர் இந்தியா மீண்டும் ஒரு கோல் அடித்தது. கணக்குத் தணிக்கைத் துறை அணி 59ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது.
முன்னதாக நடைபெற்ற 3ஆவது இடத்துக்கான ஆட் டத்தில் உத்தரப் பிரதேச அணி ரயில்வே அணியை தோற் கடித்தது.
மகளிர் போட்டி
தேசிய மகளிர் ஹாக்கி வாகையர் பட்டப் போட்டி யின் இறுதிச் சுற்றில் நடப்பு வாகையர் ஹரியானாவை தோற்கடித்து வாகையர் பட் டம் வென்றது ரயில்வே அணி.
மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 25 மற்றும் 42ஆவது நிமிடங்களில் வந் தனா கதாரியா இரண்டு ஃபீல்டு கோல்கள் அடித்தார்.
அதேபோல 34ஆவது நிமிடத் தில் கேப்டன் சான்சன் ஒரு கோலும், பூனம் ராணி ஒரு ஃபீல்டு கோலும் அடித்து உதவினர். இதற்கு அரியானா வீராங்கனைகளால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை.

மியாமியில் என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், சுவிஸ் நாட்டின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், பேஸ்கட்பால் ரசிகர்களுடன் அமர்ந்து உரையாற்றினார்.
திருச்சி, மார்ச் 23- திருச்சி யில் நடைபெற்ற வாசன் அய் கேர் - அய்டிஎஃப் ஆடவர் வாகையர் பட்ட இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் சிறீராம் பாலாஜியை 6-4, 6-4 என நேர் செட்டில் வீழ்த்தி வாகையர் பட்டத்தைக் கைப்பற்றினர் ஸ்பெயின் வீரர் என்ரிக் லோபஸ்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும், திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கமும் இணைந்து நடத்திய சர்வதேச டென்னிஸ் போட்டி திருச்சி யூனியன் கிளப் வளாகத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.
சனிக்கிழமை ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடை பெற்றது. இதில், தமிழக வீரர் சிறீராம் பாலாஜியுடன் ஸ்பெ யினின் முன்னணி வீரர் என் ரிக் லோபேஸ் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆனாலும் வாய்ப்புகளை லோபஸ் பயன்படுத்திக் கொண்டார்.
முதல் செட்டை 6-4 என வென்றார் என்ரிக் லோபஸ். 2ஆவது செட்டில் எழுச்சி சிறீராம் பாலாஜி எழுச்சி பெற முயற்சித்தும் பலனளிக் கவில்லை. இதனால், இரண் டாவது செட்டையும் 6-4 என லோபஸ் தனதாக்கினார்.
முதலிடம் பிடித்த என்ரிக் லோபேஸக்கு திருச்சி பெல் கூடுதல் பொது மேலாளர் முரளி வாகையர் பட்டத்தை வழங்கினார்.  சிறீராம் பாலா ஜிக்கு திருச்சி டிஸ்ட்லரீஸ் பொது மேலாளர் விஜயசேக ரன் 2ஆவது இடம் பெற்றதற் கான பட்டத்தை வழங் கினார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய ஆக்கி வீரருக்கு விசா மறுப்பு
புதுடில்லி, மார்ச் 23- 20ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வீரர்கள் பட்டியல் போட்டி அமைப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்ததுடன், இங்கிலாந்து விசாவுக்கும் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பஞ்சாபை சேர்ந்த பின்கள வீரர் ஹர்பிர்சிங் சந்துவுக்கு விசா வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆக்கி இந்தியா பொதுச்செயலாளர் நரிந்தர் பத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய ஆக்கி வீரர் பிரச்சினையை இந்திய ஒலிம்பிக் சங்கம் உடனடியாக காமன்வெல்த் அமைப்பு குழுவினருக்கு எடுத்து செல்ல வேண்டும்.
நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்திய ஆக்கி அணியை போட்டியில் இருந்து திரும்பப் பெறலாம். இந்த பிரச்சினை குறித்து வருகிற 29ஆம் தேதி நடைபெறும் ஆக்கி இந்தியா செயற்குழுவில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் ஹீரென்வீன் நகரில் நடைபெற்று வரும் உலக அதிவேக ஸ்கேட்டிங் வாகையர் பட்டத் தொடரின் பெண்கள் 3000 மீட்டர் பிரிவில், வெற்றி இலக்கை நோக்கி முன்னேறும் நெதர்லாந்து வீராங்கனை அய்ரின் சோவ்டென்.
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: தடுமாற்றத்துடன் செரீனா முன்னேற்றம்
டென்னிஸ் தரவரிசை யில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் தடுமாற்றத்துடன் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் இப் போட்டி நடைபெற்று வரு கிறது. இதன் முதல் சுற்று வியாழக்கிழமை நடை பெற்றது. இப்போட்டியில் சர்வ தேச அளவில் முன்னணயில் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அத னால் முதல் சுற்றிலிருந்தே ஆட்டம் சூடுபிடிக்க ஆரம் பித்தது.
மியாமி மாஸ்டர்ஸ் டென் னிஸ் போட்டியில் 5 முறை வாகையர் பட்டம் வென் றுள்ளவர் செரீனா. இவர், கஜகஸ்தானின் யரோஸ்லவா ஷ்வதோவாவுடன் மோதி னார்.
இதனால் முதல் செட் 7-6 (9/7) என்ற கணக்கில் நீண்ட நேரம் நீடித்தது. இதில், ஒரு கட்டத்தில் 3-1 என்ற கணக் கில் வில்லியம்ஸ் பின்தங்கி யிருந்தார். ஆனால், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கேம்களை வென்ற அவர் 5-3 என்ற முன்னிலையைப் பெற்றார்.
2ஆவது செட்டில் சுதாரித் துக் கொண்ட செரீனா, அதனை 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.

போட்டித் தரவரிசையில் 4ஆம் இடத்தில் உள்ள ரஷ் யாவின் மரியா ஷரபோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கருமி நராவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சானியா மிர்சா - காரா பிளாக் இணை முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா-காரா பிளாக் இணை 2ஆம் சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் 5ஆம் தரநிலையில் உள்ள சானியா மிர்சா (இந்தியா) - காரா பிளாக் (ஜிம்பாப்வே) இணை, தரநிலையில் மிகவும் பின் தங்கியிருக்கும் சீன தைபே யின் சிங் சான்-யங்ஜன் சான் இணையை எதிர்கொண் டது. 6-3, 6-7(8), 10-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சானியா இணை 2ஆம் சுற்றுக்கு முன்னேறி யது. 2ஆம் சுற்றில் இந்த இணை, ஜார்ஜியாவின் ஆக் சானா-ரஷ்யாவின் அலிசா இணையை எதிர்கொள் கிறது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண் டர் பயஸ் தனது செக் குடி யரசு பார்ட்னர் ஸ்டெபானிக் குடன் இணைந்து விளை யாடினார். 4ஆம் தரநிலை யில் உள்ள இந்த இணை, அமெரிக்காவின் எரிக் பூடோராக்-ரவேன் கிளாசன் இணையிடம் தோல்விய டைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது.




டென்னிஸ்: தமிழக இணை வாகை சூடியது
திருச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் வாகையர் பட்டத்தை கைப்பற்றியது தமிழகத்தின் அருண் பிரகாஷ்-ராம்குமார் இணை. திருச்சி யூனியன் கிளப் வளாகத்தில் நடைபெற்றும் வரும் வாசன் அய் கேர் ஆடவர் வாகையர் பட்டக் கோப்பைக்கான டென்னிஸ் போட்டிகளில், இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், இத்தாலியின் கியோர்ஜியா போர்டலூரி, ஸ்வீடனின் லூகாஸ் ரெனார்டு இணையை எதிர்த்து ராம்குமார்-அருண் பிரகாஷ் இணை விளையாடியது. முதல் செட்டை 6-3 என்ற செட்கணக்கில் தமிழக வீரர்கள் வென்ற நிலையில், இரண்டாவது சுற்றில் போர்டலூரி இணை ஆதிக்கம் செலுத்தி 6-4 என்ற கணக்கில் வென்றது. இதனால், ஆட்டம் டை பிரேக்கருக்குச் சென்றது. டைபிரேக்கரில் 10-6 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வாகையர் பட்டத்தை கைப்பற்றியது ராம்குமார் இணை.
முன்னதாக நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ராம்குமார், ஸ்பெயினின் என்ரிக்யூ லூபேஜ் பெரிஜை எதிர்த்து விளையாடினர். இதில் 7-5, 5-7, 6-4 என்ற செட்கணக்கில் பெரிஜ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் ஜீவன் நெடுஞ்செழியனை 6-4, 3-6, 6-3 தமிழகத்தின் சிறீராம் பாலாஜி வென்றார்.
பாரிஸ், மார்ச் 21-  அய்ரோப்பிய கால்பந்து வாகையர் பட்ட போட்டியில் கிரேக்கத்தின் ஒலிம்பியாக்ஸ் அணிக்கு எதிராக பிரிட்டனின் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-0 என்ற கோல் கணக் கில் வென்றது.
இந்த ஆட்டம் இங்கி லாந்தின் மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிரட்ஃபோர் டில் புதன்கிழமை நடை பெற்றது. இப்போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஒவ்வொரு அணியும் மற் றோர் அணியுடன் இரு முறை மோதும். இரண்டு ஆட்டங் களின் முடிவைத் தொடர்ந்து, அதிக கோல் களை அடிக்கும் அணி காலி றுதிக்கு முன்னேறும்.
ஒலிம் பியாக்ஸ்-மான் செஸ்ட் யுனை டெட் அணிகளுக்கு இடை யே நடை பெற்ற முதல் பிரிவு ஆட்டத் தில் ஒலிம்பியாக்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வென் றிருந்தது. இதனால், இரு அணி களுக்கும் இடையே யான 2ஆவது சுற்று ஆட்டத் தில் ஒலிம்பியாக்ஸ் ஆதிக்கம் செலுத்தி காலிறுதிக்கு முன் னேறும் என எதிர்பார்க்கப் பட்டது.
மாறாக, இந்த ஆட்டத்தில் வெகுண்டெழுந்த மான் செஸ்டர் யுனைடெட் வீரர்கள் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இரண்டு ஆட்டங்களின் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி முன்ன ணியில் இருந்ததால், அந்த அணி காலிறுதிக்கு முன் னேறியது.
இப்போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் ஜெர் மனியின் டார்மென்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவின் செயின்ட் பீட் டர்ஸ்பர்க் அணியிடம் தோற் றது. இருப்பினும், இரு அணி களுக்கும் இடையேயான முதல் ஆட்டத்தில் டார் மென்ட் அணி வெற்றி பெற் றிருந்தது. இரண்டு ஆட்டங் களின் முடிவில் அந்த அணி 5-4 என்ற கோல் கணக்கில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அணியை வீழ்த்தி காலிறு திக்கு முன்னேறியது.
காலிறுதி டிரா: காலி றுதிக்கு முன்னேறிய 8 அணி களும், மற்றோர் அணியுடன் தலா இரு முறை மோதும். இரண்டு ஆட்டங்களின் முடி வில் அதிக கோல்களை அடித் துள்ள அணிகள் அரையிறு திக்கு முன்னேறும்.
காலிறுதி யில் எதிர் அணியைத் தேர்வு செய்யும் டிரா முறை வெள் ளிக்கிழமை நடை பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து காலிறுதியின் முதல் சுற்று ஆட்டம் ஏப்ரல் 1 மற்றும் 2ஆம் தேதிகளிலும், 2ஆம் சுற்று ஆட்டம் ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளன.

சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் நெடுஞ்செழியன், ராம்குமார்
திருச்சி, மார்ச் 21-  திருச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தமிழகத்தின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஆகியோர் தகுதி பெற்றனர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் நடத்தும் வாசன் அய்கேர் ஆடவர் வாகையர் பட்ட சர்வதேச டென்னிஸ் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திருச்சி யூனியன் கிளப் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
வியாழக்கிழ மை நடை பெற்ற ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இத்தா லியின் கியோர்ஜியோ போர்ட்டலூரியுடன் ராம் குமார் மோதினார். இதில் முதல் 2 செட்களை இரு வரும் கைப்பற்றினர். வெற்றி யைத் தீர்மானிக்கும் மூன்றா வது செட்டில் ராம்குமார் 4-2 என்ற செட் கணக்கில் முன் னிலையில் இருந்தபோது ஆட்டத்திலிருந்து போர்ட லூரி விலகினார்.
இதனால், ராம்குமார் அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்வீடன் வீரர் ரெனார்டு லூகாஸக்கு எதிரான ஆட்டத்தில் 6-7,7-6, 6-1 என்ற செட் கணக்கில் தமிழ கத்தின் பாலாஜி என். சிறீராம் வெற்றி பெற்றார்.
மற்றொரு காலியிறுதியில் விஜயாந்த் மாலிக்கை 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த் தினார் ஜீவன் நெடுஞ் செழியன்.  இரட்டையர் பிரிவில் காஜா விநாயக் சர்மா, விக் னேஷ் இணையை 6-4, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக் குத் தகுதி பெற்றது ஏ.ராஜ கோபாலன்-ராம்குமார் இணை.
இரண்டாவது அரை யிறுதியில் கிரிட்டினே நிட் டின், முகுந்த் சசிகுமார் இணையை 3-7, 7-6, 10-5 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறு திப் போட்டிக்குள் நுழைந் தது இத்தாலியின் போர்ட்லூரி கியோர்ஜியோ, ஸ்வீடனின் ரெனார்டு லூகாஸ் இணை.

உலக ஸ்குவாஷ் : தீபிகா பல்லிகல் தோல்வி
பினாங்கு (மலேசியா), மார்ச் 21-  மலேசியாவில் நடைபெற்று வரும் உலக ஸ்குவாஷ் வாகையர் பட்ட போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல் தோல்வியைத் தழுவினார்.
பினாங்கு  நகரில் வியாழக் கிழமை நடைபெற்ற ஆட் டத்தில் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள எகிப்தின் ரனீம் எல் வெலி லீயிடம் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள தீபிகா தோல்வியடைந்தார்.
இதனால், இப்போட்டி யில் இந்திய வீரர், வீராங் கனைகளின் ஆதிக்கம் முடி வுக்கு வந்தது.


19 மார்., 2014


20 ஓவர் கிரிக்கெட் தகுதி சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை
5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர்–10’ சுற்

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.
பயிற்சி ஆட்டம்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக வங்காளதேசத்திற்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி நேற்று தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் இங்
சர்வதேச டென்னிஸ்:
நெடுஞ்செழியன், ராம்குமார் வெற்றி
திருச்சி, மார்ச் 19- திருச்சியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர்கள் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங் கம் மற்றும் திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் வாசன் அய் கேர் ஆடவர் வாகையர் பட்ட டென்னிஸ் போட்டி திருச்சி யில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் விஜய் கண் ணனை 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் விஜயானந்த் மாலிக்கும், ஜத்தின் தஹி யாவை 6-1,6-1 என்ற நேர் செட்கணக்கில் தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியனும் வீழ்த்தினர்.
மற்றொரு ஆட்டத்தில் சசிகுமார் முகுந்தை 6-3,7-5 என்ற செட் கணக்கில் வென் றார் ராம்குமார் ராமநாதன். ஸ்பெயின் வீரர் என்ரிக் லோபேஸிடம் வீழ்ந்தார் அஸ்வின் விஜயராகவன்.
நித்தின் கிரிட்டினேயை 6-2,7-5 என்ற செட்கணக்கில் காஜா விநாயக் சர்மாவும், உஸ்பெஸ்கிஸ்தானின் சர்வார் இக்ராம்வோவை 6-2,6-1 செட் கணக்கில் பிரான்ஸின் மத்தி யாஸ் போர்கியூவும் வென்ற னர்.
தமிழக வீரர்கள் ரஞ்சித் விராலி முருகேசன், சிறீராம் பாலாஜி இடையே நடை பெற்ற போட்டியில் பாலாஜி 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
ஸ்பெயினின் போல் டோல்டோ பாக்யூவுக்கு எதி ரான ஆட்டத்தில் ஸ்வீடனின் லூகாஸ் ரினார்டு 2-6,6-4,6-3 என்ற செட்கணக்கில் வென் றார். ஸ்விட்சர்லாந்தின் ஜானிஸ் லினிகரை தமிழகத்தின் விக் னேஷ் 4-6,6-2 7-6 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தானின் சர்வார் இக்ராம்வோவ், செர்கே ஸ்பில்வோ இணையை 6-0,6-1 என்ற செட்கணக்கில் தோற் கடித்தது மோகித் மயூர், ஆகாஸ் வாக் இணை.
மற்றொரு ஆட்டத்தில் ரோனாக் மகுஜா, அஸ்வின் விஜயராகவன் இணையை 6-4,7-6 என்ற நேர்செட்கணக் கில் வென்றனர் தமிழகத் தைச் சேர்ந்த அருண் பிரகாஷ் ராஜகோபாலன், ராம்குமார் ராமநாதன் இணை.
இதுபோல, போர்ச்சுகல் வீரர் ஆண்ட்ரே காஸ்பர் முத்ரா, பிரான்ஸின் மத்தி யாஸ் போர்க்கியூ இணை, சாகர் அகுஜா, சந்திரில்சூட் இணையிடம் 6-3,3-6,10-4 என்ற செட்கணக்கில் வீழ்ந்தது.




ஸ்குவாஷ்: ஜோஷ்னா தோல்வி
பெனாங், மார்ச் 19- உலக ஸ்குவாஷ் வாகையர்பட்ட போட்டி முதல் சுற்றில் இந் திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந் தார். மலேசியாவில் பெண்க ளுக்கான உலக ஸ்குவாஷ் வாகையர்பட்ட போட்டி நடக் கிறது. இதன் முதல் சுற்றில் 19ஆவது இடத்திலுள்ள இந் தியாவின் ஜோஷ்னா சின் னப்பா, நம்பர்-4 வீராங்கனை இங்கிலாந்தின் அலிசன் வாட் டரை சந்தித்தார்.
இதில், ஜோஷ்னா சின் னப்பா போராடி வீழ்ந்தார். இன்று நடக்கும் மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந் தியாவின் நட்சத்திர வீராங் கனை 11ஆவது இடத்திலுள்ள தீபிகா பல்லீகல், தகுதிச்சுற் றில் இருந்து முன்னேறிய இங் கிலாந்தின் லிசாவை எதிர் கொள்கிறார்.



உலக சதுரங்க தகுதிச் சுற்று
கந்தி மான்சிஸ்க், மார்ச் 19- 2014ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) வாகையர் பட்ட போட்டியில் நடப்பு வாகையர்பட்ட நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டி (கேன்டி டேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷ்யாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் உலக வாகையர்பட்ட இந்தியா வின் விஸ்வநாதன் ஆனந்த், விளாடிமிர் கிராம்னிக் (ரஷ்யா) உள்பட 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ் வொரு வீரரும் மற்ற வீரர்க ளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.
இந்த நிலையில் நேற்று நடந்த 5ஆவது சுற்றில் ஆனந்த், ரஷ்ய வீரர் டிமிட்ரி ஆன்ட்ரீ கினை எதிர்கொண்டார். கறுப்பு நிற காயுடன் ஆட் டத்தை தொடங்கிய ஆனந்த் 43ஆவது நகர்த்தலில் டிரா செய்தார்.  5 சுற்று முடிவில் ஆனந்த் 2 வெற்றி, 3 டிரா என்று 3.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக் கிறார். ஸ்விட்லர், கிராம்னிக், ஆரோனியன் தலா 3 புள்ளி களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

ஆசியா விளையாட்டுப் போட்டி தென்கொரியாவின் இன்சி யான் நகரில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடை பெற உள்ளது. இதற்கான இந்திய தூதர்களாக நியமிக்கப் பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில்குமார், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோர் ஆசிய விளை யாட்டை பிரபலப்படுத்தும் வகையில் டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
வாகையர் பட்டம் வென்ற பென்ட்டாவுடன், ரோஜர் பெடரர், ரத்வான்கா
இந்தியன் வெல்ஸ், மார்ச் 18- பரிபாஸ் ஓபன் டென் னிஸ் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நேவக் ஜோகோவிச் வாகையர் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி னார். பெண்கள் ஒற்றைய ரில் இத்தாலியின் பிளவியா பெனிட்டா வாகையர் பட் டத்தை கைப்பற்றினார்.
அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சுவிட்சர் லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர்.  ஜோகோவிச் 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக வாகை யர் பட்டத்தை கைப்பற்றி னார். முன்னதாக 2008, 2011 இல் நடந்த இத்தொடரில் கோப்பை வென்றார்.
பெனிட்டா வாகை சூடினார்:
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், இத்தாலியின் பிளவியா பெனிட்டா, போலந்தின் அக்னிஸ்கா ரத்வான்காவை எதிர்கொண்டார். அபார மாக ஆடிய பிளவியா பெனிட்டா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக வாகையர் பட்டத்தை கைப்பற்றினார்.

லயோனல் மெஸ்சி சாதனை

பார்சிலோனா, மார்ச் 18- ஒசாசுனா அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட் டியில், ஹாட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, பார்சி லோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
பார்சிலோனாவில் நடந்த லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில், பார்சிலோனா, ஒசாசுனா அணிகள் மோதின. அபார மாக ஆடிய பார்சிலோனா அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  பார்சிலோனா அணி, புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத் தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் ரியல் மாட்ரிட் (70 புள்ளி), அத்லெட்டிக் மாட்ரிட் (67 புள்ளி) அணிகள் உள்ளன.
இப்போட்டியில் மெஸ்சி,  தனது இரண்டாவது கோல் அடித்த போது, லா லிகா, கோபா டெல் ரே, சர்வதேச மற்றும் நட்பு ரீதியிலான கிளப் அணிகள் மோதும் போட் டிகளில், பார்சிலோனா அணிக் காக ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்த வீரர்கள் பட் டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 371 கோல் அடித்துள்ளார்.
இதன்மூலம் மற்றொரு பார்சிலோனா வீரர் பிலிப்பைன்சின் பவு லினோ அல்கான்டராவின் (369 கோல்) சாதனையை முறியடித்தார். இப்பட்டியலின் 3, 4ஆவது இடத்தில் முறையே ஸ்பெயினின் ஜோசப் சமிடி யர் (333), சீசர் ரோட்ரி குயஸ் (301) உள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் ஈக்வஸ்டிரியன் போட்டியில், தடைகளை தாண்டும் பிரான்ஸ் வீரர் அலெக்சாண்ட்ரி பான்டாநெல்லே.
ஜெயங்கொண்டம் , மார்ச் 17- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் 15.3.2014 சனிக்கிழமை அன்று 8-ஆம் ஆண்டு விளை யாட்டு தினவிழா நடைபெற் றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. பெரியார் பள்ளியின் உடற் கல்வி இயக்குநர் இராஜேஷ் வரவேற்புரை வழங்கினார்.
பள்ளியின் முதல்வர் ஆ. ஜான்பிரிட்டோ தலைமை யேற்று தேசியக்கொடி, ஒலிம் பிக்கொடி, பள்ளி கொடி மூன்றையும் ஏற்றினார். கொடிஏற்றும் முன்பு கொடி களின் சிறப்பினையும், ஏற் றப்படுவதற்கான காரணத் தையும் எடுத்துக்கூறினார். பள்ளியின் துணை முதல்வர் பாக்யலெட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுக்கும் நிகழ்ச் சியை தொடங்கி வைத்தார். காலை 9 மணி முதல் 2.30 மணி வரை 500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர்.
வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பதக்கங்க ளும், சான்றிதழ்கழும் வழங் கப்பட்டன. பள்ளியின் மாநில மற்றும் தேசிய வீரர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட் டது. பின்பு மீண்டும் 3.30 மணி யளவில் விழா துவங்கியது.
விழாவிற்கு சிறப்பு விருந்தி னர்களாக அரியலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர் கோவி.மனோ கரன், பெரியார் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் பேரா. சுப்ரமணியன், அரியலூர் மாவட்ட நெட்பால் கழக செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட னர். வரவேற்புரையை பள்ளி யின் முதல்வர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 4 அணி வீரர்களின் அணிவகுப்பு நடை பெற்றது. பின்பு உடற்கல்வி இயக்குநரால் விளையாட்டு ஆண்டறிக்கை வாசிக்கப்பட் டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கூட்டு உடற் பயிற்சி நடைபெற்றது. பின்பு மாணவிகளின் கோலாட்டம் மற்றும் மாணவர்களின் சிலம் பாட்டம், யோகா, பிரமிடு ஆகியவை பெற்றோர்களை யும் சிறப்பு விருந்தினர்களை யும், பார்வையாளர்களை யும் வெகுவாக கவர்ந்தன. சிறப்பு விருந்தினர் அவர் களின் தலைமை உரையில் பள்ளியின் கல்விச் சேவை யையும், பல்துறை வளர்ச்சி யையும் வெகுவாகப் பாராட்டினார்.
மாணவர்க ளுக்கு அரிய பல உண்மைச் சம்பவங்களை எடுத்துக்கூறி மாணவர்கள் பொதுமக்க ளுக்கும், காவல்துறைக்கும் பாலமாக விளங்க வேண்டும் என எடுத்துக் கூறினார். பிறகு விளையாட்டில் தனித்திறன் பெற்ற மாணவ - மாணவி களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
அணி வகுப்பில் முதல் இடத்தையும் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பையும் பெற்ற ஆரஞ்ச் நிறஅணியி னர்க்கு சுழற்கோப்பையும், சுழற்கேடயமும் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட் டது. இந்நிகழ்வில் ஜெயங் கொண்டம் காவல்துறை ஆய்வாளரும், உதவி ஆய்வா ளரும் வருகை தந்து சிறப்பித் தனர்.
பள்ளியின் துணை முதல் வர் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது. நிகழ்ச்சிகள் முழுவதையும் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் அறிவழகன் மற்றும் தாவர வியல் ஆசிரியை கவிதாவும் தொகுத்து வழங்கினர்.
கம்பம்,, மார்ச் 16- கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழக அளவில் 12ஆவது தடகள போட்டிகள், கம்பம் சிறீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல் லூரி விளையாட்டு மைதா னத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப் போட்டி பழனி யாண்டவர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை அரசு கலைக் கல்லூரி, கொடைக் கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு கலைக் கல்லூரி, தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கம்பம் சிறீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, திண்டுக்கல் செயின்ட் ஆன்டணி கல்லூரி, ஒட் டன்சத்திரம் சக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் செயலரும், சட்டப் பேரவை உறுப்பினருமான என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். போட்டிக்கு வந் திருந்த அனைத்து கல்லூரி மாணவிகளையும் கல்லூரி முதல்வர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கொ டைக்கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரியின் வளர்ச்சிக் குழு தலைவர் வாசுகி கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
பல் கலைக் கழகத்தின் உடற் கல்வித் துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜம் நடுவர் பொறுப்பு வகித்தார். 100, 200, 400, 800 மற்றும் 1500 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், தொடரோட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றன.
8 கல்லூரிகள் கலந்து கொண்ட போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கம்பம் சிறீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி பெற்றது. தனிநபர் ஒட்ட மொத்த  வெற்றிக் கோப்பை யையும் இக்கல்லூரி மாணவி தேவி பெற்றார். பரிசு பெற்ற மாணவி களை கல்லூரியின் செயலர் என். ராமகிருஷ்ணன் எம்.எல். ஏ. கல்லூரி முதல்வர் சுதமதி ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டி, பரிசுகளை வழங் கினர்.

லீ நாவை வெளியேற்றினார் பெனட்டா; அரையிறுதியில் ஜோகோவிச்
இண்டியன்வெல்ஸ், மார்ச் 16-  அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டி நடை பெற்று வருகிறது. சனிக் கிழமை நடந்த மகளிர் ஒற் றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ நா, போட்டித் தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள பெனட்டாவை சந்தித்தார். இதில், 7-6 (7/5), 6-3 என்ற செட் கணக்கில் பெனட்டா வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இரண்டு மாத இடை வெளிக்குள் லீ நா தோல்வி யைத் தழுவியுள்ளார்.
ஆனால், இந்த தோல்வி தன்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என அவர் தெரிவித்தார். அதேபோல, ஆடவர் பிரிவிலும் ஆஸ்தி ரேலிய ஓபனில் வாகையர் பட்டம் வென்ற ஸ்விட்சர் லாந்தின் வாவ்ரிங்கா காலிறு தியில் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத் தக்கது.
மகளிர் காலிறுதி மற் றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2ஆவது இடத் தில் உள்ள போலந்தின் அக் னீஸ்கா ரத்வன்ஸ்கா, 6-3, 6-4 என்ற கணக்கில் ருமேனியா வின் ஹலேப்பை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி னார்.
ஆடவர் பிரிவு காலிறு தியில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜோகோவிச் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜூலியன் பெ னட்டோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் அமெ ரிக்காவின் ஜான் அய்ஸ்னர் வெற்றி பெற்றார்.

ஸ்விஸ் ஓபன் அரையிறுதியில் சிந்து; வெளியேறினார் சாய்னா
பேசல், மார்ச் 16- ஸ்விஸ் கிராண்ட்ப்ரி கோல்ட் பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் சீனாவைச் சேர்ந்த முன்னணி வீராங் கனையை தோற்கடித்து அரை யிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை சிந்து. ஆனால், மற்றொரு  வீராங் கனையான சாய்னா நெவால் தோல்வியடைந்து வெளி யேறினார்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிருக் கான காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடை பெற்றன. போட்டித் தர வரி சையில் 7ஆவது இடத்தில் உள்ள சிந்துவும், சமீபத்தில் ஆல் இங்கிலாந்து வாகையர் பட்ட போட்டியில் பட்டம் வென்ற சீனாவின் ஷிஜியான் வங்கும் மோதினர். அதே சமயத்தில் நேர்த்தியான ஆட் டத்தை வெளிப் படுத்திய சிந்து 45 நிமிடத்தில் 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மூன்றாவது முறை யாக சீன வீராங்கனையை சிந்து தோற்கடித்துள்ளார். மற் றொரு ஆட்டத்தில் இந்தியா வின் முன்னணி வீராங்கனை யான சாய்னா, தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள இஹான் வங்கை எதிர் கொண்டார்.
38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் 17-21, 2-21 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பறி கொடுத்தார் சாய்னா. ஆடவர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப், சீன தைபேயின் முன்னணி வீரரா ன டீன் சென்னை  தோற் கடித்தார். அரையிறுதியில் காஷ்யப், தரவரிசையில் 27ஆவது இடத்தில் உள்ள சீனாவின் ஹோவெய்டியா னை எதிர்கொள்கிறார்.
பாங்காக், மார்ச் 15- ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் வில்வித்தை வாகையர் பட்ட, காம்ப வுண்டு தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா இறுதி சுற்றுக்கு முன்னே றினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், முதலாவது ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் வில்வித்தை வாகையர் பட்ட போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த காம்பவுண்டு தனிநபர் பிரிவு அரையிறுதி யில், இந்தியாவின் அபிஷேக் வர்மா, தாய்லாந்தின் டென் சாய் தெப்னாவை சந்தித்தார். அபாரமாக ஆடிய அபிஷேக் வெற்றி பெற்று இறுதி சுற் றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி யில், இந்தியாவின் சந்தீப் குமார், ஈரானின் எபாடி இஸ்மாயிலை சந்தித்தார். இதில் சந்தீப் குமார்  தோல்வி அடைந்தார். நாளை நடக்க வுள்ள இறுதிச் சுற்றில், இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஈரானின் எபாடி இஸ் மாயிலை எதிர்கொள்கிறார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், அரையிறுதி யில் தோல்வி கண்ட இந் தியாவின் சந்தீப் குமார், தாய்லாந்தின் டென்சாய் தெப்னா மோதுகின்றனர்.
பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவு அரையிறுதி யில், இந்தியாவின் பாம் பைலா தேவி, சீன தைபே யின் லின் சியாஎன் மோதினர். இதில் பாம்பைலா தேவி 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். நாளை நடக்க வுள்ள வெண்கலப் பதக்கத் துக்கான போட்டியில், இந் தியாவின் பாம்பைலா தேவி, ஜப்பானின் கயோரி கவா னகாவை சந்திக்கிறார்.

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா இணை இறுதிப்போட்டிக்கு தகுதி
இன்டியன்வெல்ஸ், மார்ச் 15- இன்டியன்வெல்ஸ் சர்வ தேச டென்னிஸ் போட்டி யில் சானியா மிர்சா இணை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 8ஆம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7-5, 6-1 என்ற நேர் செட்டில் கெவின் ஆண்டர்சனை (தென் ஆப் பிரிக்கா) வென்று அரை இறு திக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில், அலெக்சாண்டர் டோகோ போலாவ் (உக்ரைன்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) சாய்த்து அரை இறுதிக்குள் அடி யெடுத்து வைத்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் லீ நா (சீனா) 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெளியேற்றினார். இத்தாலி வீராங்கனை பிளாவியா பென்னட்டா 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் தன்னை எதிர்த்த ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி சுற்றில் சானியா மிர்சா (இந்தியா) காரா பிளாக் (ஜிம்பாப்வே) இணை 6-4, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் லூசி ஹிராடெக்கா (செக் குடியரசு) ஜெங் ஜி (சீனா) இணையை சாய்த்து இறுதிப் போட்டியை எட்டியது.

ஸ்விஸ் ஓபன்: காலிறுதியில் சாய்னா, காஷ்யப்
ஸ்விஸ் ஓபன் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் போட்டி யின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நெவால் மற்றும் காஷ்யப் முன்னேறினர்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற இப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8ஆவது இடத் தில் உள்ள சாய்னா, ஃபிரான் ஸின் சஷினா விஜ்னெஸ் வாரனை எதிர்கொண்டார். சாய்னா 21-7, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். ரூ.76 லட்சம் ரூபாய் மதிப்பிலான இப்போட் டியின் காலிறுதியில் சீனா வின் யிஹான் வங்கை சந் திக்கிறார் சாய்னா.
தரவரிசை யில் 3ஆவது இடத்தில் உள்ள யிஹானுக்கு எதிராக 6 ஆட்டங்களில் சாய்னா தோல்வியடைந்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் யிஹான் காயம் காரணமாக வெளியேறியதாலேயே சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான காலிறு திக்கு முந்தைய சுற்றில் இந் திய வீரர் காஷ்யப், 57 நிமிட போராட்டத்துக்குப் பின் 21-13, 21-9, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் பெரினோ ஜியான் சேயை வீழ்த்தினார். காலிறுதியில் சீனா தைபேயின் டின் சென் சவுவை எதிர்கொள்கிறார்


Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz2wS5W9iAY

13 மார்., 2014


விளையாட்டு செய்திகள்

பேசல், மார்ச் 13-   ஸ்விஸ் கிராண்ட் ப்ரீ கோல்டு பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியா வீராங் கனை சிந்து வெற்றி பெற்றார். ஆடவர் பிரிவில் காஷ்யப் மற் றும் ஆனந்த் பவார் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நடை பெற்றன.
மகளிருக்கான முதல் சுற்றில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள சிந்துவும், மலேசியாவின் சனட்டஸா சனிருவும் மோதி னர். 32 நிமிட போராட்டத் துக்குப் பின் 21 - 18,  21 - 15 என்ற நேர் செட்டில் அய்தாரா பாதைச் சேர்ந்த சிந்து வெற்றி பெற்றார்.
ஆடவருக்கான ஒற்றை யர் பிரிவின் முதல் சுற்றில் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற காஷ் யப் 21 - 17, 21 - 15 என்ற செட் கணக்கில் நெதர்லாந் தின் எரிக் மெய்ஜிஸை தோற் கடித்தார். மலேசியாவின் கோக்பாங் லோக்குக்கு எதி ரான ஆட்டத்தில் 21-17, 21-10 என்ற செட் கணக்கில் இந்தி யாவின் ஆனந்த் பவார் வெற்றி பெற்றார்.
ஆனால் ஆடவர் பிரிவில் சிறீகாந்தும், மகளிர் பிரிவில் சைலி ரானேயும் முதல் சுற்றில் வெற்றியைப் பறி கொடுத்து வெளியேறினர்.

கேண்டிடேட்ஸ் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த்- ஆரோனியன் மோதல் கான்ட்டி
மாஸிஸ்க், மார்ச் 13-   கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வ நாதன் ஆனந்த், தரவரிசை யில் அதிக புள்ளிகளுடன் முன்னணியில் உள்ள லே வன் ஆரோனியனை சந்திக் கிறார்.
ரஷியாவின் கான்ட்டி மாஸிஸ்க் நகரில் வியாழக் கிழமை இப்போட்டியின் முதல் சுற்று நடைபெற்றது.
வரும் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கார்ல்ஸனை எதிர்த்து ஆடுபவரைத் தேர்வு செய்வதற்கான இப் போட்டியில் முன்னணி வீரர்கள் எட்டு பேர் பங் கேற்கின்றனர்.
கடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் நார்வே யின் கார்ல்ஸனிடம் வெற்றி யைப் பறிகொடுத்த இந்தியா வின் ஆனந்த் தன் முதல் சுற்றில் ஆர்மேனியாவின் ஆரோனியனை எதிர் கொள் கிறார்.
கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இப்போட்டி யில் சாதித்தால் மட்டுமே ஆனந்த் உலக செஸ் சாம்பி யன்ஷிப் போட்டியில் பங் கேற்க முடியும். சென்னையில் நடை பெற்ற உலக செஸ் போட் டிக்குப் பின் ஜுரிச் செஸ் மற்றும் லண்டன் கிளாசிக் செஸ் போட்டிகளில் ஆனந்த் பெரிதாக சாதிக்க வில்லை என்பதால் இம்முறை எழுச்சி பெற வேண்டிய கட்டாயத் தில் உள்ளார்.
முதல் சுற்றின் மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரிகீனும், விளாடிமிர் கிராம்னிக்கும் மோதவுள்ளனர். ரஷ்யாவின் செர்ஜே கர்ஜகின் தன் முதல் ஆட்டத் தில் சக நாட்டு வீரர் பீட்டர் ஸ்விட்லரை  சந்திக்கிறார்.

இண்டியன் வெல்ஸ் காலிறுதியில் லீ நா- சிபுல்கோவா மோதல்
இண்டியன் வெல்ஸ், மார்ச் 13-   இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி யின் காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ நா மற்றும் ஸ்லோ வேகியாவின் சிபுல்கோவா மோதவுள் ளனர்.
அமெரிக்காவின் இண்டி யன் வெல்ஸ் நகரில் நடை பெற்று வரும் டபிள்யூடிஏ பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றை யர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டம் புதன்கிழமை நடை பெற்றது.
இதில் சீனாவின் லீ நாவும், கனடாவின் அலெக் ஸாண்ட்ரா வோஸ்னியாக் கும் மோதினர். அரை மணி நேர ஆட்டத்தில் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார் போட்டித் தரவரி சையில் முதலிடத்தில் உள்ள லீ நா.
மற்றொரு ஆட்டத்தில் சிபுல்கோவா, செக் குடியர சின் பெட்ரோ குவிட்டோ வாவை  6-3, 6-2  என்ற செட்டில் வீழ்த்தியிருந்தார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றின் மற்ற ஆட்டங்களில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபனஸ், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், போலந்தின் அக்னீஸ்கா ரத் வன்ஸ்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆடவர் பிரிவின் 3ஆவது சுற்றில் செர்பியாவின் ஜோ கோவிச், அமெரிக்காவின் ஜான் அய்ஸ்னர், ஸ்பெயினின் ராபர்டோ அகட், ஃபெலி சியானோ லோபஸ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற் றுக்கு முன்னேறினர்.
சென்னையில் நடை பெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே யான விளையாட்டுப் போட் டியில் ஒட்டு மொத்த வாகை யர் பட்டத்தை செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி வென்றது.
சென்னையில் செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் ஆட வர் மற்றும் மகளிர் பிரிவிலான போட்டி திங்கள் கிழமை நிறைவடைந்தது.
ஜெட்ஸ்-2014 என்ற பெய ரில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
ஆடவர் பிரிவில் நடை பெற்ற போட்டிகளில் டேபிள் டென்னிஸ், செஸ், வாலிபால், பாட்மிண்டன் ஆகிய 4 போட் டிகளில் செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி வென் றது.
கபடி போட்டியில் பிஎஸ் என் கல்லூரி அணியும், கால் பந்து போட்டியில் எம்சிசி கல்லூரி அணியும், பாட்மிண் டன் போட்டியில் எஸ்எஸ் என் கல்லூரி அணியும், கூடைப்பந்து போட்டியில் ஹிந்துஸ்தான் கலைக் கல்லூரி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
ஆடவர் பிரிவில் ஒட்டு மொத்த வாகையர் பட் டத்தை வென்ற செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல் லூரி, 12ஆவது ஆண்டாகத் தொடர்ந்து ஒட்டு மொத்த வாகையர் கோப்பையையும் வென்றது.
மாநில அளவிலான கல் லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் ஒட்டு மொத்த வாகையர் பட்டம் வென்ற செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி அணியினர்.

பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம்
தாய்லாந்தின் பங்சயின் நகரில் ஆசிய ஜூனியர் பளு தூக்குதல் வாகையர் போட்டி நடைபெற்று வருகிறது.
திங்கள் கிழமை நடை பெற்ற ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவில் கோஜம் தபா "கிளீன்' மற்றும் "ஜெர்க்' ஆகிய இரண்டு பிரி விலும் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் பூணம் இரண்டு வெண்கலப் பதக்க மும், ஹர்ஷ்தீப் கவுர் ஒரு பதக்கமும் வென்றனர்.
முன்னதாக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போட் டியில் இந்திய வீராங்கனை கள் மூன்று வெள்ளிப் பதக் கங்களைக் கைப்பற்றியிருந் தனர்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: ஹீனா சித்து, பூஜா கட்கருக்கு தங்கம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஹீனா சித்து மற்றும் பூஜா கட்கர் தங்கப் பதக்கம் வென்றனர்.
குவைத் சிட்டியில் 7ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ரைஃபிள்/பிஸ்டல் பிரிவில் ஹீனா சித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இவர், இறுதிச் சுற்று முடிவில் மொத்தம் 181.1 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.
ஹீனாவுக்கு கடும் சவால் அளித்த சீனா வைச் சேர்ந்த சியா யிங் வு 180.7 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப் பற்றினார். முன்னதாக ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான ஏர் ரைஃபிள் பிரிவில் பூஜா கட்கர் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக் குப் பெருமை சேர்த்திருந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை ஸ்வேதா செத்ரி 5ஆவது இடம் பிடித்து ஆறுதல் அளித்தார். இப்போட் டியின் ஆடவர் பிரிவில் சீனா வைச் சேர்ந்த வீரர்களே ஆதிக் கம் செலுத்தினர்.

சென்னை அய்டிஎஃப் டென்னிஸ்
சென்னை அய்டிஎஃப் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் போட்டித் தர வரிசையில் 2ஆவது இடத் தில் உள்ள ஜீவன் நெடுஞ் செழியன் மற்றும் விஜயந்த் மாலிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) மய்தானத்தில் திங்கள்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் சுற்றில் சகநாட்டு வீரர் ஜடின் தஹியாவை 6-1, 6-0 என்ற நேர் செட்டில் எளிதில் தோற்கடித் தார் நெடுஞ்செழியன். ஸ்விட்சர்லாந்தின் ஜானிஸ் லினிகெருக்கு எதிரான ஆட் டத்தில் இந்திய வீரர் விஜ யந்த் மாலிக் 5-7, 6-3, 6-3 என்ற செட்டில் வெற்றி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் சாய் சரண், அஸ்வின் விஜயராக வன், போர்ச்சுகலின் ஆண்ட்ரூ கேஸ்பர் முர்டா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இரட்டையர் பிரிவில் சிறீ ராம் பலாஜி - ரஞ்சித் இணை, இந்தியாவின் ராகுல் ராபின் சன்- ரஸ்வந்த் இணையை 6-3, 6-2 என எளிதில் வீழ்த்தியது. அதேபோல மற்ற ஆட் டங்களில் ஜீவன் நெடுஞ் செழியன் - விஷ்ணு வர்தன் இணையும், உஸ்பெகிஸ் தானின் சர்வார் இக்ரமோவ் - செர்ஜி ஷிப்லோவ் இணை யும் வெற்றி பெற்றன.
அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஃபெல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் வாவ் ரிங்கா ஆகியோர் 3ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
இப்போட்டியின் ஆட வர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டங்கள் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஸ்பெயினின் நடால் செக்குடியரசின் ரடெக் ஸ்டீபானெக்கை சந்தித்தார். சமீபத்தில் முடிந்த ரியோ ஓபனில் பட்டம் வென்ற நடால் முதல் செட்டை 2-6 என கோட்டை விட்டார். பின், அடுத்தடுத்த செட்களில் எழுச்சி பெற்ற நடால் 6-4, 7-5 என அந்த செட்களை தனதாக் கினார். இந்த ஆட்டம் இரண் டரை மணி நேரம் நடைபெற் றது.
நான்கு முறை இண்டி யன் வெல்ஸ் ஓபன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர் மற்றும் தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள வாவ் ரிங்கா ஆகியோர் சுலபமாக 3ஆவது சுற்றுக்கு முன்னேறி னர். விம்பிள்டன் சாம்பியன் ஆன்டி முர்ரே நீண்ட போராட் டத்துக்குப் பின்னரே செக் குடியரசின் லூகாஸ் ரஸாலை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரி வில், ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற சீனாவின் லீ நா, சக நாட்டு வீராங்கனை ஜகோபலோவாவை எளிதில் தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 4ஆவது இடத்திலுள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா, ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார் ஜசை சுலபமாக வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
டபிள்யூடிஏ பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி யின் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசை யில் 5ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை, அமெரிக்காவின் ராகேல் கோப்ஸ் - அபிகெய்ல் ஸ்பியர்ஸ் இணையை எதிர் கொண்டது.
ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா இணை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

சந்தோஷ் டிராபி கால்பந்து: மிசோரம் அணி சாம்பியன்
சந்தோஷ் டிராபி கால் பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மிசோரம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியை வீழ்த்தி யது. இதன் மூலம் மிசோரம் அணி முதன்முறையாக சந் தோஷ் டிராபியைக் கைப்பற் றியுள்ளது.
68ஆவது சந்தோஷ் டிராபி போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டம் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள கஞ்சன் ஜங்கா மைதானத்தில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.
இதில் இத்தொடர் முழு வதும் தொடர் வெற்றிகளின் மூலம் அசத்தலான ஆட் டத்தை வெளிப்படுத்தி வரும் மிசோரம் அணியும், ரயில்வே அணியும் மோதின. 3-0 என்ற கோல் கணக்கில் மிசோரம் அணி வெற்றி பெற்றது.
முதன்முறையாக கோப்பை வென்ற மிசோரம் அணிக்கு ரூ.5 லட்சமும், 2ஆவது இடம் பிடித்த ரயில்வே அணிக்கு ரூ. 3 லட் சமும் பரிச ளிக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் இந்திய கால்பந்து கூட்ட மைப்பின் மூத்த துணைத் தலைவர் சுப்ரதா தத்தா உள் ளிட்ட கால்பந்து கூட்ட மைப்பு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

பளுதூக்குதல் இந்திய வீராங்கனைக்கு 3 வெள்ளிப்பதக்கம்
புதுடில்லி, மார்ச் 10- ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் வாகையர் போட்டி தாய் லாந்து நாட்டில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந் திய வீராங்கனை சாய்கோம் மிராபாய் ஸ்னாட்ச் முறை யில் 75 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 93 கிலோவும், ஆக மொத்தம் 168 கிலோ தூக்கி மூன்று வெள்ளிப்பதக்கங்கள் வென்றார்.

அய்.டி.எப்.டென்னிஸ் இந்திய வீரர் மைனெனி வெற்றி
பிமாவரம், மார்ச் 10- அய். டி.எப். டென்னிஸ் போட்டி ஆந்திராவில் உள்ள பிமாவ ரத்தில் நடந்தது. இதன் ஆண் கள் ஒற்றையர் பிரிவு இறு திப்போட்டியில் இந்திய வீரர் சகெத் மைனெனி, சக வீரர் சனம் சிங்கை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சகெத் மைனெனி 46, 63, 61 என்ற செட் கணக் கில் சனம் சிங்கை தோல்வி யுறச் செய்து வாகையர் பட் டத்தை வென்றார். இரட் டையர் பிரிவில் சகெத் மைனெனி-சனம் சிங் இணை, வாகையர் பட்டத்தை கைப் பற்றி இருந்தது குறிப்பிடத் தக்கது.
கோவை, மார்ச் 9- கோவை யில் நடைபெற்ற அகில இந் திய மின் வாரியங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் அஸ்ஸாம் அணி வாகையர் பட்டத்தைக் கைப்பற்றியது.
கோவையில் கடந்த புதன்கிழமை துவங்கிய இப் போட்டியில் 15 மாநிலங் களைச் சேர்ந்த மின் வாரிய அணிகள் பங்கேற்றன. கடந்த ஆண்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்ற மேற்கு வங்கம், அஸ்ஸாம், டில்லி, கேரள அணிகள் இந்த ஆண்டு நேர டியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
சனிக்கிழமை காலையில் நடைபெற்ற முதல் அரை யிறுதி ஆட்டத்தில் அஸ்ஸாம் அணி 2-0 என்ற கோல் கணக் கில் மேற்கு வங்க அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இரண்டா வது அரையிறுதியில் கேரள அணி 2-1 என்ற கோல் கணக் கில் டில்லி அணியை வீழ்த் தியது.
கோவை நேரு விளை யாட்டு அரங்கில் சனிக் கிழமை மாலையில் நடை பெற்ற இறுதி ஆட்டத்தில் அஸ்ஸாம், கேரள அணிகள் மோதின. இரு அணிகளிலும் சந்தோஷ் கோப்பையில் விளையாடும், விளையாடிய வீரர்கள் இடம் பெற்றிருந் தனர்.
ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் இரு அணிகளுக் கும் கோல் அடிக்கும் வாய்ப் புகள் கிடைத்தன. ஆனால், இரு அணிகளும் அவற்றை வீணடித்தன. இதனால் வழக் கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை.
இதனால், பெனால்டி கார்னர் மூலம் ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தங்களுக்குக் கிடைத்த 5 வாய்ப்புகளையும் அஸ் ஸாம் வீரர்கள் கோலாக மாற்றினர். ஆனால் கேரள அணிக்குக் கிடைத்த இரண் டாவது வாய்ப்பை அஸ்ஸாம் கோல் கீப்பர் தடுத்துவிட் டார். இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் அஸ்ஸாம் அணி வென்றது.
அஸ்ஸாம் அணி கடந்த ஆண்டு நடந்த போட்டியில் கேரள அணியிடம் தோல்வி யடைந்து 3ஆவது இடத்தை இழந்தது. இந்த ஆண்டு கேர ளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சுமார் 25 ஆண்டுகளுக் குப் பின் அஸ்ஸாம் அணி மீண்டும் பட்டம் வென்றுள் ளது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் சானியா இணை
கலிபோர்னியா, மார்ச் 9- பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந் தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை முன்னேறியது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு இரண் டாவது சுற்றில் இந்தியாவின் சானியா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை, அமெ ரிக்காவின் ராகியுல், அபிகய்ல் இணையை சந்தித்தது.
இதன் முதல் செட்டை 63 என கைப்பற்றிய சானியா, இரண்டாவது செட்டையும் 64 என தன்வசப்படுத்தியது. முடிவில், சானியா, காரா பிளாக் இணை 63, 64 என வெற்றி பெற்று காலிறுதிக் குள் நுழைந்தது.

அகில இங்கிலாந்து பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா தோல்வி
இங்கிலாந்து பாட்மிண் டன் வாகையர்பட்ட தொட ரின் காலிறுதிச் சுற்றில் இந்தி யாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்து வெளியே றினார்.
பர்மிங்ஹாமில் வெள் ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 7ஆவது இடத் தில் உள்ள சாய்னா, தரவரி சையில் 3ஆவது இடத்தில் உள்ள ஷிஸியான் வங்கை எதிர்கொண்டார். லீக் ஆட்டங்களில் சிறப் பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வந்த சாய்னா இம் முறை சீன வீராங்கனையி டம் வெற்றியைப் பறிகொடுத் தார்.
43 நிமிட போராட்டத் துக்குப் பின் ஷிஸியான் வங் 17-21, 10-21 என்ற செட் கணக் கில் சாய்னாவை வீழ்த்தினார். ஷிஸியான் அரையிறுதி ஆட் டத்தில் யிகான் வங்கை எதிர் கொள்கிறார்.
இத்தொடரில் 3ஆவது முறையாக காலிறுதி ஆட்டத் தில் சாய்னா தோல்வியடைந் துள்ளார். 2010 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் சாய்னா, அரை யிறுதிச் சுற்று வரை முன்னே றியிருந்தது குறிப்பிடத்தக் கது.
இதற்கு முன் பிரகாஷ் படுகோன் மற்றும் கோபி சந்த் (சாய்னாவின் பயிற்சி யாளர்) ஆகியோர் மட்டுமே இப்போட்டியில் இந்தியா சார்பில் பட்டம் வென்று உள்ளனர்.
பிர்மிங்ஹாம், மார்ச் 7-  டென்னிஸில் விம்பிள்டன் போட்டியைப் போல கரு தப்படும் ஆல் இங்கி லாந்து வாகையர் பட்ட பாட்மிண் டன் போட்டியில் இந்தியா வின் சாய்னா நெவால் 2ஆவது சுற்றுக்கு முன்னே றினார்.
மற்றொரு வீராங்கனை யான பி.வி.சிந்து 16-21, 15-21 என்ற நேர் செட்களில் சீனா வின் யு சன்னிடம் தோற்று போட்டியிலிருந்து வெளி யேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரி வில் பங்கேற்ற பருபள்ளி காஷ்யப் மற்றும் கே.சிறீ காந்த் ஆகியோரும் முதல் சுற்றுகளிலே பின்னடை வைச் சந்தித்தனர்.
தற்போதைய நிலையில், இப்போட்டியின் 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்களில் சாய்னா நெவால் மட்டும் களத்தில் உள்ளார். அவரே இந்தியா வின் கடைசி நம்பிக்கை யாகவும் திகழ்கிறார்.
எளிய வெற்றி: பிர்மிங் ஹாம் நகரில் உள்ள தேசிய உள்விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. சாய்னா, தனது முதல் சுற்றில் ஸ்காட்லாந் தின் கிறிஸ்டி கில்மெளரை எதிர்கொண்டார்.
இதில் முதல் சுற்றில் சிறிது ஆதிக் கம் செலுத்திய கில்மௌர், 2ஆவது சுற்றில் தனது ஆற் றல் முழுவதையும் இழந் தார். அவருக்கான வாய்ப்பு களை சாய்னா ஏற்படுத்தித் தரவில்லை. அதனால், 21-15, 21-6 என்ற நேர் செட்களில் சாய்னா வென்றார்.


டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் சனம் சிங்

பீமாவரம், மார்ச் 7- அய்.டி.எப்., டென்னிஸ் ஒற் றையர் பிரிவு அரை யிறுதிக்கு இந்தியாவின் சனம் சிங், சிறீராம் பாலாஜி, விஷ்ணு வர்தன், சாகேத் மை னேனி முன்னேறினர்.
ஆந்திர மாநிலம் பீமா வரம் நகரில், ஆண்களுக் கான அய்.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சனம் சிங் 61, 61 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் சசிகுமார் முகுந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி னார்.
மற்றொரு காலிறுதி யில், இந்தியாவின் விஷ்ணு வர்தன் 76, 64 என்ற நேர் செட் கணக்கில், சகநாட்டை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழி யனை தோற்கடித்து, அரை யிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்தியாவின் சிறீராம் பாலாஜி 61, 64 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கோ சுசூகியை வீழ்த்தி அரை யிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் சாகேத் மை னேனி 62, 63 என்ற நேர் செட் கணக்கில், சகவீரர் சந்திரில் சோத்தை தோற்கடித்து அரை யிறுதிக்கு முன்னேறினார்.
இந்திய இணை அபாரம்: இரட்டையர் பிரிவு அரை யிறுதியில், இந்தியாவின் சிறீராம் பாலாஜி, ரஞ்சித் விராலி முருகேசன் இணை 64, 63 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ராம் குமார் ராமநாதன், ஸ்பெயி னின் கேப்ரியல் ட்ரூஜில் லோசோலர் இணையை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி யில், இந்தியா வின் சனம் சிங், சாகேத் மை னேனி இணை 67, 62, 107 என்ற செட் கணக்கில், சகநாட்டை சேர்ந்த ஜீவன் நெடுஞ் செழியன், விஷ்ணு வர்தன் இணையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பளு தூக்குதல்: வெங்கட் ராகுல் தங்கம்

புதுடில்லி, மார்ச் 7-  ஆசிய யூத் பளுதூக்குதல் வாகையர் பட்ட 77 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் இரண்டு தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றார்.
தாய்லாந்தில், 16ஆவது ஆசிய யூத் பளுதூக்குதல் வாகையர் பட்ட போட்டிகள் நடக்கின்றன. ஆண்களுக் கான 77 கி.கி., எடைப்பிரிவு ஸ்னாட்ச் பிரிவில் (133 கி.கி.,) வௌளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் வெங்கட் ராகுல், கிளீன் அன்டு ஜெர்க் பிரிவில் (163 கி.கி.,) தங்கம் வென்றார்.
ஒட்டுமொத்த மாக 296 கி.கி., பளுதூக்கிய ராகுல், முத லிடம் பி