28 மே, 2014


உலகக்கிண்ண தகுதிகாண் கால்பந்து: பிலிப்பைன்ஸிடம் வீழ்ந்தது இலங்கை

2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பிலிப்பைன்ஸிடம் தோல்வியுற்று இலங்கை வெளியேறியுள்ளது.


கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி 1-1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றது. எனினும் இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பிலிப்பைன்ஸ் அணி 4-0 விகிதத்தில் இலங்கையை தோற்கடித்தது.

ரிஸால் ஞாபகார்த்த அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பத்திலிருந்து பிலிப்பைன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இடைவேளையின்போது அவ்வணி 2-0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது. இடைவேளையின்பின் மேலும் இரு கோல்களை பிலிப்பைன்ஸ் அணி அடித்தது.

இப்போட்டியை 13,000 ரசிகர்கள் நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் அணி இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில் குவைத் அணியுடன் மோதுவதற்கு தெரிவாகியுள்ளது. இலங்கை இன்றைய போட்டியுடன் இத்தொடருக்கான தகுதிகாண் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது. (Pix by: REUTERS and AFP)

கருத்துகள் இல்லை: