9 மே, 2014

மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் லீ நா, செரீனா
மாட்ரிட் ஓபன் டென் னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு காலிறுதிச்சுற்றுக்கு சீனாவின் லீ நா, அமெரிக் காவின் செரீனா வில்லி யம்ஸ், செக் குடியரசின் பெட்ரோ குவிட்டோவா ஆகிய வீராங்கனைகள் முன் னேறியுள்ளனர்.
மாட்ரிட் நகரில் வியா ழக்கிழமை நடைபெற்ற 3ஆம் சுற்று ஆட்டத்தில் லீ நா 2-6, 6-3, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபான்ஸ வீழ்த்தினார்.
பெட்ரா குவிட்டோவா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சக நாட்டைச் சேர்ந்த லூசியா சஃபரோவாவை தோற்க டித்து அடுத்த சுற்றுக்கு முன் னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் சவு ரஸ் நவரோவாவை தோற் கடித்து காலிறுதிக்கு முன் னேறினார். இப்போட்டி யின் காலிறுதிக்கு தொடர்ந்து 3ஆவது ஆண்டாக செரீனா முன்னேறியுள்ளது குறிப் பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு 3ஆம் சுற்றில் ஃபின்லாந்தின் ஜார்கோ நிமெய்னனை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் நடால் தோற் கடித்தார். சமீபத்தில் நடை பெற்ற 2 டென்னிஸ் தொடர் களில் தொடக்க சுற்று களிலேயே தோல்வியைத் தழுவிய நடாலுக்கு இந்த வெற்றி புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கும்.
மற்ற ஆட்டங்களில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 3-6, 2-6 என்ற நேர் செட்களில் கொலம் பியாவின் சான்டியாகோ ஜிரல்டோவிடம் தோற்று போட்டியிலிருந்து வெளி யேறினார். ஜப்பான் வீரர் நிஷிகோரி 7-6, 7-6 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை தோற்கடித்தார்.
மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை 7-5, 1-6, 8-10 என்ற செட் கணக்கில் சீன தைபே இணையிடம் தோல்வியடைந்தது.

அர்ஜூனா விருதுக்கு 4 ஆக்கி வீரர்கள் பெயர் பரிந்துரை
புதுடில்லி, மே 9- இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய ஆக்கி வீரர்கள் ரகுநாத், தரம் விர்சிங், துஷர் கண்டேகர், முன்னாள் கேப்டன் பரத் சேத்ரி ஆகியோரின் பெயர் களை ஆக்கி இந்தியா அமைப்பு பரிந்துரை செய் துள்ளது.
பயிற்சியாளர்க ளுக்கு அளிக்கப்படும் துரோ ணாச்சார்யா விருதுக்கு, இந் திய ஜூனியர் பெண்கள் அணி யின் பயிற்சியாளர் ரோமேஷ் பதானியாவின் பெயர் பரிந் துரைக்கப்பட்டுள்ளது.

லா லிகா கால்பந்து போட்டி
லா லிகா கால்பந்து போட் டியில் வல்லடோலிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் சமன் செய்தது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ரியல் மாட்ரிட் 1 கோல் அடித்து முன்னிலை யில் இருந்தது. இந்த கோலை 35ஆவது நிமிடத்தில் செர் ஜியோ ரமோஸ் அடித்தார்.
அதன் பிறகு இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத் தினர். ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு வல்லடோலிட் அணியின் ஹம்பர்டோ ஒசாரியோ கோல் அடித்தார். இதனால், ஆட்டம் 1-1 என்று சமனில் முடிந்தது.
இந்த ஆட்டத்தை சமன் செய்ததன்மூலம், லா லிகா பட்டத்தை ரியல் மாட்ரிட் கைப்பற்றுவது கடினமாகி யுள்ளது.
தற்போதைய நிலையில் அட்லெடிகோ மாட்ரிட் 88 புள்ளிகளுடன் முதல் இடத் திலும், பார்சிலோனா அணி 85 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் உள்ளன. ரியல் மாட்ரிட் 84 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று அணிகளுக் கும் இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே மீதம் உள்ளன.
எதிர்வரும் ஆட்டங்க ளில் அட்லெடிகோ மாட் ரிட்டும், பார்சிலோனாவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்பதால், ரியல் மாட்ரிட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் வரும் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் தாமஸ் மற்றும் உபெர் கோப்பை போட்டிக்கு மகளிர் பிரிவை சாய்னா நெவாலும், ஆடவர் பிரிவை சிறீகாந்துக்கும் வழி நடத்திச் செல்ல உள்ளனர்.
உபெர் கோப்பை என்று அழைக்கப்படும் உலக மக ளிர் பாட்மிண்டன் வாகையர் பட்ட போட்டியில் விளையா டும் இந்திய அணியின் ஒற் றையர் பிரிவில் சாய்னாவைத் தவிர பி.வி.சிந்து, அருந்ததி பண்ட்வானா, தன்வி லாட், துளசி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இப்போட்டியின் இரட் டையர் பிரிவுக்கு ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன் னப்பா இணை தலைமை தாங்க உள்ளது. மேலும், அபர்னா பாலன், என். சிக்கி ரெட்டி, பிரதன்யா காட்ரே உள்ளிட்டோர் இரட்டையர் பிரிவில் பங்கேற்க உள்ளனர்.
தாமஸ் கோப்பை அல் லது உலக ஆடவர் பாட்மிண் டன் வாகையர் பட்ட போட் டியில் விளையாடும் இந்திய அணியில் சிறீகாந்த், பி.காஷ் யப், குருசாய் தத், சவுரவ் வர்மா, சாய் பிரணீத் ஆகியோர் ஒற் றையர் பிரிவிலும், பிரணவ் ஜெர்ரி சோப்ரா, அக்ஷய் தவல்கார், மனு அட்டரி, அருண் விஷ்னு மற்றும் சமீத் ரெட்டி ஆகியோர் இரட்டை யர் பிரிவிலும் இடம் பிடித் துள்ளனர்.
சர்வதேச அணிகள் பங் கேறும் இத்தொடரில் ஓர் அணி மற்றொரு அணியுடன் 5 ஒற்றையர் மற்றும் 5 இரட்டையர் ஆட்டங்களில் மோதும்.
இத்தொடரின் ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் பங் கேற்கின்றன. இரு பிரிவுகளி லும் இந்திய அணி சி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இத்தொடரின் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் நடப்புச் வாகையராக சீனா களமிறங் குகிறது. சீனாவைத் தவிர மலேசியா, இந்தோனேசியா ஆகிய அணிகள்  கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் 2ஆவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை  சிங் சான் (சீனத்தைபே)-ஸ்சீபர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று (7.5.2014) நடந்த ஏ.எப்.சி., கால்பந்து போட்டியில் கவாசாகி மற்றும் சியோல் அணிகள் மோதின. போட்டியில் விளையாடிய வீரர்கள்.

இலவச கைப்பந்து பயிற்சி முகாம்

சென்னை ஜாலி கைப் பந்து கிளப் மற்றும் மறை மலை நகர் அரிமா சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித் தன் நினைவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
மறைமலைநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் தொடங்கிய இந்த முகாம் வருகிற 18ஆம் தேதி வரை நடக்கிறது. பயிற்சி முகாமை அரிமா சங்க மண்டல தலை வர் பி.சடகோபன், மறைமலை நகர் முன்னாள் தலைவர் ஏ.கே.தனசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அரிமா மாவட்ட தலைவர் கே.சுப்பிர மணியன் ஏற்பாட்டில் நடை பெறும் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளவர்க ளுக்கு பயிற்சியாளர்கள் கண பதி, கவுரி ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள்.

தேசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, மே 8- தமிழ் நாடு தடகள சங்கம் சார்பில் 12ஆவது பெடரேஷன் கோப் பைக்கான தேசிய ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள வாகையர் பட்ட போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (9ஆம் தேதி) முதல் 11ஆம் தேதி வரை நடக்கிறது.
நாளை மாலை 4 மணிக்கு நடை பெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப் பினர் செயலாளர் வி.கே. ஜெயக்கொடி சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு போட் டியை தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 800 வீரர்வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட் டிக்கான தமிழக அணியில் 32 வீரர்களும், 29 வீராங்கனை களும் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டியின் அடிப் படையில், சீனதைபேயில் ஜூன் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடை பெறும் ஆசிய ஜூனியர் தட கள வாகையர் பட்டபோட் டிக்கான இந்திய தடகள அணி தேர்வு செய்யப்படுகிறது.
சென்னை, மே 7- சென்னை நேரு ஸ்டேடியத்தில் செயல் பட்டு வரும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சர்வதேச கைப் பந்து சம்மேளன மண்டல வளர்ச்சி மய்யம் சார்பில் சர்வதேச கைப்பந்து பயிற்சி யாளர் (லெவல்-1) பயிற்சி முகாம் சென்னையில் இரண்டு வார காலமாக நடந்து வந் தது.
இதில் இந்தியா மற்றும் கென்யாவை சேர்ந்த பயிற்சி யாளர்கள், வீரர்கள் மொத் தம் 39 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு பயிற்சி முகா மின் அறிவுரையாளர்களாக தாட்சுயா அடாச்சி (ஜப் பான்), சிறீதரன் (இந்தியா), பானிஸ்லாவ் மோரே (செர் பியா) ஆகியோர் இருந்து பயிற்சி அளித்தனர்.
இவர்க ளுக்கு செய்முறை தேர்வு நேற்று முன்தினமும், எழுத்து தேர்வு நேற்றும் நடந்தது. அதைத் தொடர்ந்து நடை பெற்ற நிறைவு விழாவில் காவல்துறை ஆணையர் எஸ்.ஜெயகுமார் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு சிறப்பு பரிசுகளையும், சான் றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இந்திய கைப் பந்து சம்மேளன தலைமை செயல் அதிகாரி கே.முருகன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

மாட்ரிட் டென்னிஸ் ரவுண்ட்-அப்
டென்னிஸில் முன்னாள் நம்பர்-1 வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான ரஷ்யாவின் தினாரா சஃபினா (28) சர்வதேச டென்னிஸி லிருந்து ஓய்வு பெற்றார்.
இதுகுறித்து ரஷ்ய டென் னிஸ் சம்மேளனம் விடுத்த செய்திக்குறிப்பில், 12 டென் னிஸ் பட்டங்களை வென்ற சஃபினா டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார். மாட்ரிட் டென்னிஸ் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார். அங்கு அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரி விக்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறு கையில், எனது ஓய்வு முடிவை முன்னரே எடுத்து விட்டேன். எனது கடைசி போட்டி யாக மாட்ரிட் டென்னிஸில் விளையாடினேன். அதனால், இங்கு ஓய்வு பெறுவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன் என்றார்.

ஜூனியர் கூடைப்பந்து வாகையர் பட்ட போட்டி சென்னையில் நாளை தொடக்கம்

26ஆவது மாவட்ட அணி களுக்கு இடையேயான ஜூனி யர் கூடைப்பந்து வாகையர் பட்டப் போட்டி சென்னை யில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் வியா ழக்கிழமை தொடங்குகிறது.
4 நாள்கள் நடைபெறும் இப்போட்டி வரும் ஞாயிற் றுக்கிழமையுடன் நிறைவ டைகிறது.
18 வயதுக்குட்பட்டோ ருக்கான இருபாலர் பிரிவி லும் நடைபெறும் இப்போட் டியை தமிழ்நாடு கூடைப் பந்து சங்கத்துடன் இணைந்து செயின்ட் ஜோசப் கல்வி குழு மம் நடத்துகிறது.
மாணவர்கள் பிரிவில் 25 அணிகளும், மாணவிகள் பிரி வில் 20 அணிகளும் இப்போட் டியில் கலந்து கொள்கின்றன.
மாணவர் பிரிவில் சென்னை அணியும், மாணவிகள் பிரி வில் கோவை அணியும் நடப்பு வாகையராக களமிறங்கு கின்றன.
வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியின் முடிவில், தமிழக ஜூனியர் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த அணி, தேசிய அளவிலான ஜூனியர் வாகை யர் பட்டப் போட்டியில் பங்கேற்கும். இப்போட்டி கேரளத்தில் வரும் 26ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சானியா இணை வெற்றி
மாட்ரிட், மே 7- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை வெற்றி பெற்றது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் நடக் கிறது. இதன் பெண்கள் இரட் டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, ஜிம் பாப்வேயின் காரா பிளாக் இணை, கனடாவின் கேப்ரி யலா, போலந்தின் அலிஸ்ஜா ரோஸ்லாகா இணையை சந்தித்தது.
முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றிய சானியா இணை, இரண் டாவது செட்டை 5-7 என பறி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி சூப்பர் டைபிரேக்கர் சென்றது. இதில் அசத்திய சானியா இணை 10-7 என வசப்படுத் தியது.
முடிவில் சானியா, காரா பிளாக் இணை 6-1, 5-7, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற் றுக்கு முன்னேறியது


Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz31DuW2n9a

கருத்துகள் இல்லை: