6 ஏப்., 2011


சாம்பியன்ஸ் லீக்: ரியல் 'புயல்' வேக ஆட்டம் மிரட்டிய டாட்டன்ஹாம் மிரண்டு ஓடியது
 சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்ற டாட்டன்ஹாமை ரியல்மாட்ரிட் 4-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது.
 மாட்ரிட்டில் உள்ள சான்டியாகோ பெர்னாபூ ஸ்டேடியத்தில் ரியல்மாட்ரிட் இங்கிலாந்தின் டாட்டன்ஹாமை சாம்பியன்ஸ் லீக் கால்இறுதியில் எதிர்கொண்டது. சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்றுள்ள டாட்டன்ஹாமை கண்டு ரியலும் மிரண்டு போய்தான் இருந்தது.
 ஆட்டம் துவங்கிய 4வது நிமிடத்தில் இம்மானுவேல் அடபாயர் அடித்த கோல் மூலம் ரியலுக்கு சற்று நம்பிக்கையும் தெம்பும் வந்தது. ரியல் 1-0 என்று முன்னிலை பெற்ற நிலையில் 15வது நிமிடத்தில் டாட்டன்ஹாமுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த அணியின் முன்னணி வீரரான பீட்டர் கூரூச் தொடர்ந்து இரு மஞ்சள் அட்டைகளை பெற்றதால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். 10 வீரர்களுடன் விளையாடிய டாட்டன்ஹாமால் ரியல் வீரர்களை சமாளிக்க முடியவில்லை.
 தொடர்ந்து பிற்பாதி ஆட்டத்தில் 57வது நிமிடத்தில் அடபாயர் தலையால் முட்டி 2வது கோலை அடித்தார். அதை தொடர்ந்து 57 வது ஏஞ்சல் டி மரியா,87வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலா ஒரு கோல் அடித்தனர்.ஆட்ட நேர இறுதியில் ரியல்மாட்ரிட் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.2வது லெக் ஆட்டம் வருகிற 13ந் தேதி லண்டனில் உள்ள வொயிட் ஹார்ட் லைன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது

கருத்துகள் இல்லை: