6 ஜன., 2011

மிகச்சிறந்த அணியை தெரிவு செய்க: ஜனாதிபதி மஹிந்த
[ புதன்கிழமை, 05 சனவரி 2011, 03:34.12 பி.ப GMT ]
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக மிகச்சிறந்த அணியை தெரிவு செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
பலரின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் மிகச்சிறந்த 15 பேரை இச்சுற்றுப்போட்டிக்கான அணிக்கு தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: