13 பிப்., 2011

இந்தியா 214 ரன்களுக்கு ஆல்-அவுட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே பயிற்சி ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 44.3 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சேவாக் 54 ரன்கள் எடுத்தார். 
இந்திய அணி 29.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில் 9-வது விக்கெட்டுக்கு இணைந்த யூசுப் பதான்-அஸ்வின் ஜோடி 49 ரன்கள் சேர்த்தது.

இதேபோல், கடைசி விக்கெட்டாக அஸ்வின்-நெஹரா ஜோடி 27 ரன்கள் சேர்த்தது. கடைசி 2 விக்கெட்டுகள் 76 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

யூசுப் பதான் 32 ரன்களும், நெஹரா 19 ரன்களும் எடுத்தனர். அஸ்வின் 25 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

கருத்துகள் இல்லை: