10 ஜூன், 2014

பிரெஞ்ச் ஓபெனில் நாடால் வெற்றி பெற்றார் 
பாரிஸ், ஜூன் 9- களி மண் களமான பிரெஞ்சு ஓபனில் அசைக்க முடி யாத மன்னன் என்பதை அழுத்தமாக நிரூபித்தார் ரபெல் நடால். நேற்று நடந்த பரபரப்பான இறு திப்போட்டியில் ஜோகோ விச்சை வீழ்த்தி, தொடர்ந்து 5ஆவது முறையாக கோப்பையை வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறு திப்போட்டியில், உலகின் நம்பர்-1 வீரரான ஸ்பெயி னின் ரபெல் நடால், நம்பர்-2 இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர் கொண்டார்.
முதல் செட்டை ஜோகோவிச் 6-3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட நடால், ஒரு மணி நேரம் நீடித்த இரண்டாவது செட்டை 7-5 என போராடி தன்வசப் படுத்தி பதிலடி கொடுத் தார்.
தொடர்ந்து அசத் திய இவர், மூன்றாவது செட்டை 6-2 என மிகச் சுலபமாக தனதாக்கினார். நான்காவது செட்டையும் 6-4 என வென்றார். மூன்று மணி நேரம், 33 நிமிடங்கள் போராட்டத் துக்குப் பின் நடால் 3-6, 7-5, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, வாகையர் பட்டத்தை கைப்பற்றினார்.

உலக ஹாக்கி: ஜெர்மனி வெற்றி
நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில், ஆண்களுக் கான 134ஆவது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
நேற்று பி பிரிவில் நடந்த லீக் போட்டியில், ஜெர்மனி, நியூசிலாந்து அணிகள் மோதின. அபார மாக ஆடிய ஜெர்மனி அணி 5-3 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.
இன்று ஏ பிரிவில் நடக்கும் லீக் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட இந்திய அணி, ஸ்பெயினுக்கு எதிராக டிரா செய்தது. பின், மலேசியாவை வீழ்த்திய இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழுத் திறமையை வெளிப்படுத்தி 2ஆவது வெற்றி பெற முயற்சிக்கலாம்.
நட்பு கால்பந்து அர்ஜென்டினா வெற்றி
பிரேசிலில், பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 12ஆம் தேதி துவங்குகிறது. இதில் ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் விளையாடுகின்றன.
அர்ஜென்டினா வில் உள்ள பியுனஸ் ஏர்ஸ் நகரில் நடந்த போட்டி யில், அர்ஜென்டினா, சுலோவேனியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர் ஜென்டினா சார்பில் ரிகார்டோ அல்வரஸ் (12ஆவது நிமிடம்), லியோனல் மெஸ்சி (76ஆவது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

பிரெஞ்ச் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், நம்பர் 1 இணையான சூ வெய் ஸை (தைபே) - ஷுவாய் பெங் (சீனா) இணை 6-4, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானி - ராபர்டா வின்சி இணையை (2ஆவது ரேங்க்) வீழ்த்தி வாகையர் பட்டம் வென்றது. கோப்பையுடன் சூ வெய் சை, ஷுவாய் பெங் மற்றும் 2ஆவது இடம் பிடித்த சாரா எர்ரானி, ராபர்டா வின்சி.
முன்னணி வீராங்கனை யான செரீனா முதலிலேயே வெளியேறியதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா, இறுதிச் சுற்றில் ஹாலேப்பை வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார். களிமண் தரை யில் ஷரபோவா வெல்லும் 2ஆவது பட்டம் இது. இதற்கு முன் 2012இல் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஒட்டு மொத்தத்தில் ஷரபோவா வெல்லும் 5-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவா கும்.
பாரிஸில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற் றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள ஷரபோவாவும், ருமேனி யாவைச் சேர்ந்த இளம் வீராங்கனையான சிமோனா ஹாலேப்பும் மோதினர். இப்போட்டி யின் தொடக்கத்தில் இருந்தே முன்னணி வீராங்கனை களை தோற்கடித்து வந்த ஹாலேப் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் தொட ரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதிச் சுற்றிலும் அவர் ஷரபோவாவுக்கு கடும் சவால் அளித்தார். முதல் செட்டை ஷரபோவா எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டில் ஹாலேப் எழுச்சி பெற்றார். குறிப் பாக ஷரபோவாவின் சர்வ் களை பிரேக் செய்தார். டை பிரேக்கர் வரை நீடித்த இந்த செட்டை ஹாலேப் கைப்பற்றினார். இதனால், 3ஆவது செட் பரபரப்பை ஏற்படுத்தியது.
2001ஆம் ஆண்டுக்குப் பின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டம் முதன்முறையாக 3-வது செட் வரை நீண்டது. 3ஆவது செட்டில் அனுபவ வீராங்கனையான ஷரபோவா எழுச்சி பெற் றார். அதனால் அந்த செட் அவர் வசமானது.
முடிவில் 6-4, 6-7(5/7), 6-4 என்ற செட் கணக்கில் ஷர போவா வெற்றி வாகை சூடினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் நடைபெற் றது. இளம் வீராங்கனை என்ற போதிலும் ஹாலேப் கடும் சவால் அளித்தார்.  தொடர்ந்து இரண்டா வது முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடர்களின் அரையிறுதி மற்றும் இறு திச் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஹாலேப்புக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.

இந்தியாவில் ஆசியப் போட்டி
2019-இல் இந்தியாவில் ஆசியப் போட்டிகளை நடத்துவது குறித்து இன் னும் முடிவெடுக்கப்பட வில்லை என இந்திய ஒலிம்பிக் சங்க (அய்.ஓ.ஏ) தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
ஆசியப் போட்டிகளை நடத்துவதற்கான போட் டியில் இருந்து வியத்நாம் விலகியதை அடுத்து கடந்த மாதம் அய்ஓஏ செயலா ளர் ராஜீவ் மேதா கூறுகை யில் ஆசியப் போட்டி களை இந்தியா நடத்த விரும்புகிறது. இதுகுறித்து அடுத்த மாதம் அய்ஓஏ பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அய்ஓஏ தலைவர் தற்போது இதை மறுத்துள்ளார்.

உலக கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா
மூன்று நிமிட இடை வெளியில் ஆகாஷ்தீப் சிங் இரண்டு கோல்கள் அடித்து உதவ மலேசியா வுக்கு எதிரான உலக கோப்பை ஹாக்கி போட் டியின் லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந் திய அணி வெற்றி பெற்றது.
நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மலேசியாவும் மோதின. இதற்கு முந்தைய மூன்று ஆட்டங்களிலும் தோல்வி யடைந்த மலேசியாவை, இந்தியா எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே இந்தியா வெற்றிபெற்று, இப்போட் டியில் தனது முதல் வெற் றியைப் பதிவு செய்தது.
முடிவில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்றுள் ளது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம் பியனான ஆஸ்திரேலி யாவை எதிர்கொள்கிறது.
இந்த சீசனின் இரண்டா வது கிராண்ட்ஸ்லாம் தொட ரான பிரெஞ்சு ஓபன் டென் னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தரவரிசையில் முத லிடத்தில் உள்ள நடாலும், 2ஆவது இடத்தில் உள்ள ஜோகோவிச்சும் முன்னே றினார்.
களிமண் தரையின் நாய கனும், எட்டு முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றவரு மான நடால், 2ஆவது முறை யாக முறையாக இப்போட் டியின் இறுதிச் சுற்றுக்கு முன் னேறியுள்ள ஜோகோவிச்சை தோற்கடித்து 9ஆவது முறை யாக பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு கனிந்துள்ளது.
பாரிஸில் களிமண் தரை யில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் இறுதி கட் டத்தை எட்டியுள்ளது. வெள் ளிக்கிழமை ஆடவர் ஒற்றை யர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா வைச் சேர்ந்த ஜோகோவிச், லத்வியா வீரர் எர்னஸ்ட் குல்பிஸ எதிர்கொண்டார்.
தரவரிசையில் 18ஆவது இடத்தில் உள்ள குல்பிஸ் முந்தைய சுற்றுகளில் கிராண்ட் ஸாம் நாயகன் ரோஜர் ஃபெ டரர் மற்றும் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி இருந்ததால் அவர் மீது எதிர் பார்ப்பு நிலவியது.
ஆனால், 13ஆவது முறை யாக கிராண்ட்ஸ்லாம் போட் டியின் இறுதிச் சுற்றுக்கு முன் னேறும் முனைப்பில் கவன மாக ஆடிய ஜோகோவிச் முதலிரண்டு செட்களை 6-3, 6-3 என கைப்பற்றினார். குல் பிஸ அவர் நேர் செட்டில் தோற்கடிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், 3ஆவது செட்டில் எழுச்சி பெற்ற குல்பிஸ் 6-3 என அந்த செட்டை தனதாக்கி னார். 4ஆவது செட் ஜோகோ விச் வசமானது. முடிவில் 6-3, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக் கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
மற்றொரு அரையிறுதி யில் ஸ்பெயினைச் சேர்ந்த நடாலும், பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரேவும் மோதினர். பிரெஞ்சு ஓபனில் இதுவரை ஒரேயொரு ஆட் டத்தில் மட்டுமே தோல்விய டைந்துள்ள நடாலை, முர்ரே தோற்கடிப்பது சிரமம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், 77 ஆண்டுக ளுக்குப் பின் பிரிட்டனைச் சேர்ந்த வீரர் ஒருவர் பிரெஞ்சு ஓபனை வெல்ல கிடைத்தி ருக்கும் வாய்ப்பை முர்ரே சரியாக பயன்படுத்திக் கொள்வார் என பிரிட்டன் ரசிகர்கள் நம்பினர்.
இதற்கு வாய்ப்பு அளிக் காமல் தனது வெற்றி நடை யைத் தொடர்ந்தார் நடால்.
உடல் மொழியில் எவ் வித பதட்டத்தையும் வெளிப் படுத்தாமல் ஆட்டத்தைத் தொடர்ந்த நடால் முதலி ரண்டு செட்களை வசப்படுத் தினார். குறிப்பாக 2ஆவது செட்டில் முர்ரேவின் சர்வ் களை பிரேக் செய்வதில் நடால் பெரிதாக சிரமப்பட வில்லை.
இந்த செட்டில் முர்ரே சோர்வாக இருந்ததை உணர்ந்த நடால், அசத்தலான சர்வ், ஷார்ப்பான ஷாட்கள் மூலம் முர்ரேவைத் திணற டித்தார். மூன்றாவது செட்டை நடால் எளிதில் கைப்பற்றி னார்.
நூறு நிமிடங்கள் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்
கோவையில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டியில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக வலுதூக்கும் சங்க ஆதரவுடன் கோவை சிறீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
உத்தரப் பிரதேசத்தின் பிரதீப்குமார் யாதவ் முதலிடமும், தெலங்கானாவின் சையத் ரப்பான் குவாட்ரி இரண்டாமிடமும், மகாராஷ்டிரத்தின் பிரதமேஷ் பவாஸ்கர் மூன்றாமிடமும் பெற்றனர்.
120 கிலோ: கர்நாடகத்தின் அஷ்ரப் அலி முதலிடமும், தமிழகத்தின் யோகராஜ் இரண்டாமிடமும், கேரளத்தின் ஹரிநாராயணன் மூன்றாமிடமும் பெற்றனர். 120 கிலோவுக்கு மேற்பட்டோர்: தமிழகத்தின் அருண்ராஜா முதலிடமும், கேரளத்தின் அர்ஜூன் இரண்டாமிடமும், தமிழகத்தின் சுரேந்திரன் மூன்றாமிடமும் பிடித்தனர்.
தமிழகத்தின் பிரியா முதலிடமும், அசாமின் உபாமா ராய் இரண்டாமிடமும், புதுச்சேரியின் புவனேஸ்வரி மூன்றாமிடமும் பெற்றனர்.

ஜூனியர் ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்
ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட அய்ந்து பதக்கங்கள் கிடைத்தன.
மங்கோலியாவின் உலன் பதார் நகரில் நடைபெற்று வந்த இப்போட்டியின் மகளி ருக்கான கிரிகோ ரோமன் ஸ்டைல் பிரிவில் வினேஷ் (51 கிலோ) தங்கப் பதக்கம் வென் றார்.
இப்பிரிவில் மற்றொரு வீராங்கனை பூஜா தண்டா (58 கிலோ) வெண்கலம் வென்றார். ஆடவருக்கான கிரிகோ ரோமன் ஸ்டைல் பிரிவில் ரவீந்தர் (60 கிலோ), சந்தீப் (84 கிலோ), அனில் (50 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
சிமோனா ஹாலேப்
பாரிஸ், ஜூன் 6-  பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் கனடாவின் பெசார்டை வீழ்த்திய ரஷியாவின் மரியா ஷரபோவா தொடர்ந்து 3-வது முறையாகவும், ருமேனியா வைச் சேர்ந்த சிமோனா ஹாலேப் முதன்முறையாக வும் இறுதிச் சுற்றுக்கு முன் னேறியுள்ளனர்.
பாரிஸில் வியாழக் கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஷரபோவாவும், தர வரிசையில் 18-வது இடத்தில் உள்ள பெசார்டும் மோதினர். முன்னணி வீரங்கனையான ஷரபோவாவுக்கு பெசார்டு கடும் சவால் அளித்தார். 44 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டில் 6-4 என பெசார்டு வெற்றி பெற்றார்.
2-வது செட்டில் தனது தவ றுகளைத் திருத்திக் கொண்ட ஷரபோவா எழுச்சியுடன் ஆடினார். இந்த செட் ஒரு மணி நேரம் நீண்டது. இறு தியில் 7-5 என அந்த செட்டை ஷரபோவா தன்வசப்படுத் தினார்.
3-வது செட்டில் இருவருக் கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் முதல் 3 கேம்களை ஷரபோ வா கைப்பற்றியதால் நம்பிக் கையுடன் இருந்தார். அதே நம்பிக்கையுடன் ஆடிய அவர்  மூன்றாவது செட்டை 6-2 என கைப்பற்றினார்.
இரண்டாவது அரையிறு தியில் ருமேனியாவின் சிமோனா ஹாலேப்பும், ஜெர் மனியைச் சேர்ந்த ஆண்ட் ரியா பெட்கோவிச்சும் மோதி னர். இதில் 6-2 7-6(4) என்ற செட் கணக்கில் ஹாலேப் வெற்றி பெற்றார். இதன் மூலம் ருமேனியாவில் இருந்து பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமை யைப் பெற்றார்.

உலக கோப்பை ஹாக்கி போட்டி
த ஹேக், ஜூன் 6- உலக கோப்பைக்கான ஹாக்கியில் தொடர்ந்து இரு போட்டிக ளில் தோல்விகளை சந்தித்த இந்தியா, ஸ்பெயினுடனான தனது மூன்றாவது ஆட்டத்தை டிரா செய்து ஒரு புள்ளியை பெற்றுள்ளது.
முதல் போட்டியில் பெல் ஜியத்திடமும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்திட மும், தோல்வியடைந்த இந் தியா ஸ்பெயினுடனான ஆட் டத்தை டிரா செய்ததன் மூலம் தோல்விக்கணக்கை தடுத்து நிறுத்தியுள்ளது. இனி அடுத் தடுத்த போட்டிகளில் இந் தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில், ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கிடைத்த வாய்பை பயன் படுத்தி இந்திய வீரர் ரூபீந்தர் பால் சிங் கோல் அடித்து சாதனை படைத்தார். இந்தியா அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ஸ்பெயினும் தங்கள் திறமையை நிரூபித் தது. ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஸ்பானியார்ட் ராக் ஒலிவா அற்புதமான கோல் அடித்து கோல் கணக்கை சமன் செய் தார்.
ஆட்டத்தின் இரண்டா வது பாதியில் இரு அணிக ளும் கோல் அடிக்க முயற் சித்த போதும், கோல் எதுவும் விழ வில்லை. இதனால் 1-1 என்ற கணக்கில் இப்போட்டி டிரா ஆனது. வரும் சனிக் கிழமை நடைபெறும் போட் டியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்ள உள்ளது.

சென்னையில் டேபிள் டென்னிஸ்: 1000 பங்கேற்பு
சென்னை, ஜூன் 6- சென்டர் கோர்ட் டேபிள் டென்னிஸ் கிளப் சார்பில் இந்தயின் ஆயில் நிறுவனம் ஆதரவு டன் முதலாவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென் னையில் நடத் தப்படுகிறது. இந்தப் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல்  8ஆம் தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
12 பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் சத்யன், ரோகித், பிரியா, நிவேதிதா, அருள்செல்வி போன்ற முன் னணி வீரர், வீராங்கனைகள் உள்பட 1009 பேர் பங்கேற் கிறார்கள். இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ. 70 ஆயிரம் ஆகும்.
8ஆம் தேதி மாலை நடைபெறும் பரி சளிப்பு விழாவில் இந்தியன் ஆயில் நிறுவன (அய்.ஒ.சி.) செயல் இயக்குனர் யூ.வி. மன்னூர் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். மேற்கண்ட தகவலை போட்டி ஒருங்கிணைப்பாள ரும், சென்னை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க செயலாளரு மான ஜே.செல் வக்குமார் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு செர்பியாவின் பெட்கோவிச், ருமேனியாவின் சிமோனா ஹாலேப் ஆகியோர் முன் னேறினர்.
பாரிஸில் புதன்கிழமை மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடை பெற்றன. முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள சாரா எர் ரானியும், 28ஆவது இடத்தில் உள்ள பெட்கோவிச்சும் மோதினர். 63 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் தரவரிசையில் முன்ன ணியில் உள்ள வீராங்கனை சாராவை, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார் பெட்கோவிச்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள ஹாலேப் பும், தரவரிசையில் 27ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் குசனெட்சோவாவும் மோதினர். இதில் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ஹாலேப் வெற்றி பெற்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதியில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜோகோவிச் 7-5, 7-6(4), 6-4 என்ற செட் கணக்கில் ரயோ னிக்கை வீழ்த்தினார். இதன் மூலம் ஆறாவது முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறு திக்கு ஜோகோவிச் முன் னேறியுள்ளார்.
முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் வெல்லும் முனைப்பில் உள்ள ஜோகோ விச்சுக்கு அரையிறுதியில் சவால் காத்திருக்கிறது. ஏனெனில், மற்றொரு காலி றுதி ஆட்டத்தில் செக்குடிய ரசைச் சேர்ந்த தாமஸ் பெர் டிச்சை 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்த லத்வியாவின் இளம் வீரர் எர்னஸ்ட் குல்பிஸ் அச்சுறுத் தலாக உள்ளார்.
25-வயதாகும் குல்பிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற் றில் கிராண்ட்ஸ்லாம் நாயகன் ஃபெடரரை தோற்கடித்திருந் தார். அதிலிருந்தே குல்பிஸ் மீதான எதிர்பாப்பு அதிகரித் துள்ளது.

மாவட்ட கூடைப்பந்து போட்டி
தூத்துக்குடி, ஜூன் 5- தூத்துக் குடி கிளாசிக் கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அள விலான ஆண், பெண்களுக் கான கூடைப்பந்து போட்டி நடந்தது. ஆண்கள், பெண் கள் அணிகளுக்கு தனித்தனி யாக போட்டிகள் நடத்தப் பட்டன.
முதல் சுற்று நாக் அவுட் முறையிலும், அடுத்த சுற்று லீக் முறையிலும் நடந் தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி க. சேவியர் ஜோதி சற்குணம் தொடங்கி வைத்தார்.
இறுதி போட்டியில் பெண் கள் பிரிவில் ஹோலிகிராஸ் அணியும், டி.பி.ஏ.அணியும் விளையாடின. இதில் டி.பி.ஏ. அணி வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி ஒய்.பி.சி. அணியும், தூத்துக் குடி அர்ஜூன் அணியும் விளையாடின. இதில் ஒய்.பி.சி. அணி வெற்றிபெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு கிளாசிக் கழக கூடைப்பந்து தலைவர் டன்ஸ்ட்டன் டி. ஜோசப் தலைமை தாங்கி னார். செயலாளர் ஆர்.முனிய சாமி முரளி முன்னிலை வகித் தார். மைக்கேல் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செய லாளர் வி.ஆர்.சிவகுமரன் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் கிரசன்ட் பள்ளி தாளாளர் ஏ.எம்.யூசுப், தொழில் அதிபர்கள் நெல்சன், நார்ட் டன் ஆகியோர் கலந்து கொண் டனர். முடிவில் துணை தலை வர் எப்.ரவி நன்றி கூறினார்.

வாலாஜாவில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
வாலாஜா, ஜூன் 5- வாலாஜாவில் ரியுஷிகான் ஷிட்டோரியு கராத்தே பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. போட்டியை ராணிப்பேட்டை தொகுதி முஹம்மத்ஜான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வன்னிவேடு ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்குமார், நரசிம்மன் பல்லவன் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக இயக்குநர் கோபிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி பேசினார்கள். பிளாக்பெல்ட் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிளாக்பெல்ட் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.கலைமணி, சோக்அன்ஷி, டேக்ஷிமசுயமா, கராத்தே போட்டி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். வி.கே.வாசுதேவன், பி.எஸ்.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Read more: http://www.viduthalai.in/home/sports.html#ixzz34E8098N2

கருத்துகள் இல்லை: