6 ஜூன், 2014

ரொனால்டோ காயமடைந்தமைக்கு தனது மந்திரமே காரணம் - கானா மந்திரவாதி பரபரப்பு தகவல் 
news
 போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்தமைக்கு தனது மந்திரமே காரணம் என கானா நாட்டைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார்.
 
'நானா க்வாகு போன்சாம்' என்ற இந்த நபர் தன்னைத்தானே மந்திரவாதி என்று அழைத்துக் கொள்பவர். 
 
இவர் போர்த்துக்கல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குக் காயம் உண்டாக வேண்டுமென தொடர்ந்து மந்திர வேலைகளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
 
மந்திரவாதி கானாவில் உள்ள தனியார் வானொளி ஒன்றில் வெளியிட்ட கருத்து
 
'நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது மந்திர சக்திகளை ஏவி விட்டேன் நான் இதில் மிகவும் உண்மையாக ஈடுபட்டேன் கடந்த வாரம் 4 நாய்களைத் தேடினேன் அதன் மூலம் 'காவிரி கபம்' என்ற ஒரு ஆவியை உருவாக்கினேன்.
 
அவரால் இந்தக் காயங்களிலிருந்து மீள முடியாது ஏனெனில் இது உடல் ரீதியானது அல்ல மந்திரத்தால் விளைந்தது. நான் 4 மாதங்களுக்கு முன்பே கூறினேன் ரொனால்டோவை நான் கண்காணித்து வருகிறேன் என்று உலகக் கிண்ண போட்டிகளில் அவரால் விளையாட முடியாது.
 
கானா அணிக்கு எதிராக அவர் விளையாடக்கூடாது என்று நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். இன்று அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது நாளை தொடையில் ஏற்படும் மறுநாள் வேறு ஒரு இடத்தில் என்று காயம் ஏற்படும்.' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: