7 ஜூன், 2014


பிரேசில் கிண்ணத்தைக் கைப்பற்றும்-கைல 
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிரடியால் மிரட்டும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், கால்பந்து பிரியர், இம் முறை பிரேசில் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.
 
 
உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிபா 20ஆவது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி அடுத்த வாரம் பிரேசிலில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே கெய்ல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கெய்ல் மேலும் தெரிவிக்கையில், 
 
நான் சிறுவயது முதலே கால்பந்து ரசிகன். பாடசாலையில் கல்விகற்கும் போது 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து அணியை வழிநடத்தினேன்.
 
பாடசாலை விட்டு வீடு வந்தபிறகும் கால்பந்துதான் விளையாடுவேன். அப்போதெல்லாம் எனக்கு கிரிக்கெட் பற்றிய எண்ணம் இருந்ததே கிடையாது.
 
இந்த உலக கிண்ணக் கால்பந்து போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். எப்போதுமே நான் பிரேசில் அணியின் ரசிகன். இம் முறை சொந்த மண்ணில் உலக கிண்ணப் போட்டி இடம்பெறுவது பிரேசில் அணிக்கு நெருக்கடி தரலாம்.

கருத்துகள் இல்லை: